புதன், 22 ஏப்ரல், 2020

சம்பளத்துக்கு ஆப்பு வச்சிட்டார்

*வச்சிட்டாருய்யா.. விகடன் ஓனரும் சம்பளத்துக்கு ஆப்பு வச்சிட்டார்*

கொரோனா பரவலை மக்களுக்கு நொடிக்கு நொடி அறிவித்து அலெர்ட் செய்து வரும் ஊடக நிறுவனங்கள் இப்போது நடக்கும் ஊரடங்கால் விற்பனை குறைந்திருக்கிறது. விளம்பரங்கள் வீழ்ச்சியடைந்திருக்கிறது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வேலை நீக்கம், ஊதியவெட்டு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஊடக நிறுவன உரிமையாளர்கள் அறிவிப்பது அதிகரித்து வருகிறது..

ஏற்கெனவே 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை காரணம் காட்டி இதேபோன்று ஆட்குறைப்பு என்ற பெயரால் ஏராளமானோரை வேலைநீக்கம் செய்தனர். தற்போது ஊடக நிறுவனங்கள் ஊரடங்கை காரணம் காட்டி நிறுவன மூடலாக மாற்றப் போவதாக பயமுறுத்துகின்றன. முன்னரே நம் குரூப்-பில் சொன்னது போல் , இந்தியாவின் மிகச் செழிப்பான ஊடக நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் பெருமளவில் ஊழியர்களை வேலையை விட்டு துரத்தியிருக்கிறது. கம்யூனிஸ்ட் பாணியில் சொல்வதானால் அந்நிறுவனத்தன் செல்வ செழிப்பிற்கு இந்த தொழிலாளிகளை வேலையில் வைத்திருப்பதால் அவர்கள் எதையும் இழக்க மாட்டார்கள், அந்த நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபத்தோடு ஒப்பிட்டால் ஊழியருக்கான தொகை என்பது மிகமிக குறைவாகும். இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் லாபம் சேகரிப்பதற்கும் 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களை கூட கேள்வி கேட்பாரின்றி வெளியேற்றி இருக்கிறார்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் தான் வெளியிட்டு வரும் ஞாயிறு சிறப்பு இணைப்பு இதழை (சன்டே மேகசின்) மூடிவிட்டது. அதில் பணிபுரிந்த நோனாவாலியா தமது முகநூல் பக்கத்தில், “ எனது மேலதிகாரி பூனம்சிங் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம், சன்டே மேகசின் பிரிவில் பணிபுரியும் ஒட்டுமொத்த ஊழியர்களையும் வேலையை விட்டு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். 24 வருடங்களாக நான் நேசித்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ரொம்ப கேஷூவலாக 10 முதல் 30 சதவீதம் வரை சம்பளத்தை வெட்டிய இந்தியன் எக்ஸ்பிரஸ்இந்தியன் எக்ஸ்பிரசின் சிஇஏ ஜார்ஜ் வர்கீஸ் சில நாட்களுக்கு முன்பு தனது ஊழியர்களுக்கு ஒரு குறிப்பை சுற்றுக்கு விட்டுள்ளார். அதில் “நமது விளம்பர வருமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. கிடைக்கும் எல்லா தரவுகளும் மிக மோசமான நாட்கள் இனிமேல்தான் வரப்போகின்றன. ஊழியர்கள் 10 – 30 சதவீதம் வரை சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். நிர்வாகத்தின் உயர்நிலையில் உள்ளவர்களும், ஆசிரியர்களும் சம்பளம் இல்லாமலேயே வேலை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்

பல மாநிலங்களில், நாளிதழ்கள் தங்களது பல பதிப்புகளை மூடியுள்ளன. “நாளிதழ்கள் தினசரி வருவாய் இழப்பை சந்திப்பதாக” இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி கூறியிருக்கிறது. இதிலிருந்து மீள காகித்தின் மீதான இறக்குமதி வரி 5 சதவீதத்தையும் ரத்து செய்ய வேண்டும். 2 வருடங்களுக்கு வரி விடுமுறை வேண்டும். அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 50 சதவீதம் உயர்ந்த வேண்டும். அச்சு ஊடகங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை 100 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று கோருகிறார்கள்.

இதைபற்றியெல்லாம் பேசுகிறவர்கள் ஜர்னலிஸ்ட் என்று கெத்தாய் பணி புரியும் தொழிலாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பேசுவதே கிடையாது.சம்பளம் இல்லாத விடுமுறையை திணிக்கும் தி குவிண்ட்இணைய இதழ் தி குவிண்ட் அதனுடைய ஊழியர்களில் 50 சதவீதம் பேரை சம்பளம் இல்லாத விடுப்பில் விரட்டி இருகிறது. மற்றவர்களுக்கு சம்பள குறைப்பை செய்திருக்கிறது.

காட்சி ஊடகத்திலும் கொடுமைநாடு முழுவதும் நூற்றுக்கணக்கான காட்சி ஊடக ஊழியர்கள் தங்களது வாழ்க்கையை பணையம் வைத்து கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், ஊரடங்கின் தாக்கம் குறித்தும் செய்தி சேகரிக்கிறார்கள். சென்னையிலுள்ள சத்யம் டிவி -யில் பணியாற்றும் ஊழியர்கள் 25க்கும் அதிகமானோர்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களா

இச்சூழலிலும் ஊழியர்களாக களத்தில் செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு ஊக்கம் தர வேண்டும். மாறாக, உடனடி சம்பள வெட்டும், வேலையிலிருந்து விரட்டுவதும் ஊடகத்துறையினரின் ஊக்கத்தை பாதிக்கிறது. குறிப்பாக,  தன் சொத்தை விற்று நிர்வாகத்தை நடத்தி சாதனை புரிந்த விகடன் எம் டி பாலசுப்பிரமணியன் கட்டிக் காத்த நிறுவன ஓனர் கீழ்கணும் கடிதத்தை தன் ஊழியர்களுக்கு அனுப்பி இருக்கிறார்

அக்கடிதத்தில்

அன்புள்ள விகடன் குழும பணியாளர்களே,

உலகம் இதுவரை பார்த்திராத கொடுமையான கொரோனா நோய் பரவியிருக்கும் சோதனையான இத்தகைய காலகட்டத்தில் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் பாதுகாப்பாக இருக்க, நான் பிரார்த்திக்கிறேன்.

நம்முடைய மீடியா துறைக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. என்றாலும் நம் அனைவரின் பாதுகாப்புக் கருதி, மார்ச் 22 -ம் தேதியே 'வீட்டிலிருந்து பணி' என்பதை நாம் நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டோம்.

கடந்த ஒரு மாதகாலமாக விகடனின் நலன்விரும்பிகள், விளம்பரதாரர்கள், முகவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நிர்வாகப் பணியாளர்கள், ஓவியர்கள், கட்டுரையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என அனைவருடனும் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி வருகின்றீர்கள். தனித்தனியே இருந்தாலும், பற்பல கோணங்களில் இணைந்தே சிந்தித்து, நன்கு உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள், கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் எனக் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்து வருகிறீர்கள். உங்களின் படைப்புகள், நம் வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் என பலதரப்பட்டவர்களின் பாராட்டுதல்களையும் பெற்றுவருகின்றன என்பதைப் பெருமையுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த இக்கட்டான தருணத்தில்... கடமை என்பதையும் தாண்டி, சிறப்பாகச் செயல்பட்டதன் வெற்றியே... நமக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டுகள். இதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கிடையே, விகடன் குழுமத்தின் முக்கியமான நான்கு பிரிவுகளில், மூன்று பிரிவுகள் இந்த ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதையும் நீங்கள் நன்றாகவே அறிந்திருப்பீர்கள்.

94 ஆண்டுகளாக நமது நிறுவனத்தின் இதயமாகச் செயல்பட்ட நம் இதழ்கள் கடந்த ஒரு மாதமாக வாசகர்களை நேரடியாகச் சென்றடைய முடியவில்லை. டெலிவிஷன் தொடர்கள், காலவரையின்றி நிறுத்தப்பட்டுவிட்டன. விகடனுக்குக் குறிப்பிடத்தக்க வருவாயைத் தரக்கூடிய - வாசகர்களுக்குப் பயனளிக்கக்கூடிய விகடனின் பிரத்யேக நிகழச்சிகள் மற்றும் விகடன் குழும விருதுகள் உள்ளிட்டவையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது.

சோதனையான இந்தக் காலகட்டத்தில் நம்முடைய டிஜிட்டல் பிரிவு மட்டுமே சற்று ஆறுதல் தரும்விதத்தில் நடைபோடுகிறது. டிஜிட்டல் என்பதைப் பொறுத்தவரை, இதுகாலம் வரை அதில் நாம் செய்துவந்த முதலீடுகள் தற்போது ஓரளவுக்கு வெளிச்சத்தைக் காணஆரம்பித்துள்ளன. ஆனால், இந்த டிஜிட்டல் வளர்ச்சி வரவிருக்கும் காலகட்டத்தில் பெருகினாலும், நம்முடைய ஆதார ஸ்ருதியாக இருக்கும் இதழ்கள் அனைத்தும் பழைய நிலைக்குத் திரும்பினாலும்கூட, இந்தப் புதிய உலகில் நம்முடைய அடுத்தகட்ட பாய்ச்சல்களுக்கு அவற்றால் போதுமான அளவுக்குத் தோள்கொடுக்க முடியாது என்பதே உண்மை.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நானும் உங்களுடைய துறைத் தலைவர்களும் அலுவலகச் செலவினங்களை குறைப்பதற்காகக் கடும்முயற்சிகள் செய்துவருகிறோம். கூடவே, வருவாயைப் பெருக்குவதற்கான பல்வேறு முயற்சிகளையும் புதுப்புது யுக்திகளையும் ஆலோசித்துச் செயல்படுத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.

தற்போதைய சூழலிலிருந்து நாம் மீள்வதற்கு செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்பதுதான் நம் கண்முன்னே தெரியும் உடனடி சர்வரோகநிவராணி. இதற்காக நம்முடைய பல்வேறு துறைகளின் தலைவர்கள் (Leaders), தங்களுடைய சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர். இது, மிகவும் ஆக்கப்பூர்வமான ஒரு முடிவு.

இதைப் பெருமையுடன் நோக்கும் அதே தருணம், அனைத்துத் துறை தலைவர்களுடனும் ஆலோசித்து, கனத்த இதயத்துடன் மற்றுமொரு முடிவையும் எடுத்துள்ளோம். அதாவது, பணியாளர்கள் ஒவ்வொருவரின் மாதாந்திரச் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்பதுதான் அந்த முடிவு. இந்த 2020-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள மூன்றுமாத காலத்துக்கு இந்தச் சம்பள ஒத்திவைப்பு முதற்கட்டமாக நடைமுறையில் இருக்கும். நாட்டின் பொருளாதாரம் மற்றும் நம் அலுவலகத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கனக்கில் கொண்டு ஜூலை 2020-.ல் சம்பள ஒத்திவைப்பு மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதனடிப்படையில் சம்பள ஒத்திவைப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.

சம்பள ஒத்திவைப்பு என்பது, நிறுவனம் லாபத்துக்குத் திரும்பி, பழையபடி பணவரத்து அதிகரித்த பின் வாபஸ் பெறப்படக்கூடிய வகையிலான ஒரு திட்டமே! இத்தகைய முயற்சிதான், எந்தவொரு நிறுவனத்துக்கும் இதுபோன்ற சூழல்களில் உடனடியாகக் கைகொடுக்கக்கூடிய ஒரு யுக்தி. நம்முடைய அலுவலகத் துறைத் தலைவர்கள், நிறுவனத்தின் நிதிநிலையை நன்கு அறிந்தவர்கள். சம்பள ஒத்திவைப்பு எந்தமாதிரியான சூழலில் மறுஆய்வு செய்யப்படும் என்பதையும் அவர்கள் நன்றாக அறிந்தவர்களே. வெகுவிரைவில் சம்பள ஒத்திவைப்பு திரும்பப் பெறப்படும் வகையில் நிறுவனத்தின் நிதிநிலையை உயர்த்த அனைவரும் பாடுபடுவோம்.

நிதி பாதுகாப்பு என்பது ஒவ்வொரு குடும்பத்தையும் திறம்பட நடத்துவதற்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு குடும்பத் தலைவனாக நானும் நன்கு அறிவேன். நாம் அனைவருமே எதிர்பாராத, சிக்கலான ஒரு காலகட்டத்தைக் கடக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். செலவினங்களைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மட்டுமே இதற்கு உடனடித் தீர்வு என்பதைத்தான் அனைவருமே நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தக் கடுமையான சூழல் மிகவிரைவில் மறைந்து புதியஉலகம் தோன்றும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அத்தகைய புதியஉலகுக்கு கட்டியங்கூறுவதுபோல நம்முன்னே புதுப்புது யதார்த்தங்கள் இப்போதே வரிசைகட்ட ஆரம்பித்துள்ளன. அவற்றையெல்லாம் எதிர்கொள்ள முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையுடன் செயல்பட தொடங்குவோம், வளமான புதிய உலகத்தில் தடங்கல்கள் இன்றி நாம் பயணிப்போம். நம்முடைய வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் தேவையறிந்து புத்தாக்கங்களுடன் கடுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் செயலாற்றி, புதிய உலகத்தின் சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு சாதிப்போம்.

'வலிமையானவர்கள், புத்திசாலித்தனமானவர்கள் என்பதால் மட்டும்  இவ்வுலகில் பிழைத்திருக்க முடியாது.

மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதாலும் மட்டும்தான் எப்போதுமே பிழைத்திருக்க முடியும்'

என்று சார்லஸ் டார்வின் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த உலகம் நேரடியாக உணர்ந்து கொண்டிருக்கும் காலகட்டமிது

நாமும் மாற்றங்களுக்கு உட்படுவோம்... வெற்றிபெறுவோம். நாம் எதிர்பார்ப்பதைவிட முன்கூட்டியே வெற்றியைக் கொண்டாடும் நிலையை நோக்கி முன்னேறுவோம்.

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்...வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். தேவைப்படும் சமயத்தில் மட்டும் தக்க பாதுகாப்புக் கவசங்களுடன் வெளியில் நடமாடுங்கள்.

கொரோனா பரவலை தடுப்பதற்காகத்.  தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் போற்றுங்கள்!

நன்றி

அன்புடன்

பா.சீனிவாசன்.
இயக்குநர்
விகடன் மீடியா சர்வீசஸ் (பி) லிமிடெட்

அப்படீன்னு சொல்லி இருக்கார்

இத்தனைக்கும் இன்றைய ஊடக முதலாளிகளுக்கு (மட்டும்) நெருக்கமான பிரதமர்மோடி நிர்வாகங்கள் ஊரடங்கு நேரத்தில் சம்பளத்தை குறைக்க வேண்டாம், வேலையை விட்டு நீக்க வேண்டாம் என்றெல்லாம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை கூட சட்டை செய்யமல் அதிகரிக்கும் இந்த அடாவடி போக்குக்கு தொடர்ந்து கமா விழுந்தபடி தொடர்வதை வேதனையுடன் பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் போலிருக்கிறது..

அமெரிக்க அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய அமெரிக்கர் நியமனம்; டிரம்ப் அறிவிப்பு

*அமெரிக்க அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய அமெரிக்கர் நியமனம்; டிரம்ப் அறிவிப்பு*

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக இந்திய அமெரிக்கரான சுதர்சனம் பாபு என்பவரை அதிபர் டொனால்டு டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இதன்படி, 6 ஆண்டுகள் அவர் இந்த பதவியில் நீடித்திடுவார்.

கடந்த 1986ம் ஆண்டு தமிழகத்தின் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பும், கடந்த 1988ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் முதுநிலை தொழில்நுட்பம் (தொழிற்சாலை உலோக பிரிவியல், வெல்டிங்) பிரிவிலும் படித்து பட்டம் பெற்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டமும் பெற்றுள்ளார்.

அவர், இன்டர்டிசிபிளினெரி ரிசர்ச் மற்றும் கிராஜுவேட் கல்விக்கான பிரெடிசன் மைய இயக்குனராக இருந்து வருகிறார். தயாரிப்பு மற்றும் உலோக பிரிவியலில் 21 வருட அனுபவம் கொண்டவராகவும் உள்ளார்.

சுதர்சனம் பாபு, அமெரிக்க அறிவியல் வாரியத்தின் உறுப்பினரான 3வது இந்திய அமெரிக்கராவார். அவருக்கு முன் அரிசோனா பல்கலைக்கழகத்தின் சேதுராமன் பஞ்சநாதன் மற்றும் வெர்மோன்ட் பல்கலைக்கழகத்தின் சுரேஷ் வி. கரிமெல்லா ஆகிய இருவரும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

புதன், 15 ஏப்ரல், 2020

ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை



ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை:


1. அனைத்து வேளாண் நடவடிக்கைகள் செயல்படலாம்
2. மீன் பிடி தொழிலில் ஈடுபடலாம்
3. 50% பணியாளர்களுடன் டீ, காபி, ரப்பர் தோட்டங்களில் பணிகளை செய்யலாம்
4. பால் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட பணிகளை தொடரலாம்
5. வங்கிகள் வழக்கமான நேரங்களில் சேவைகளை வழங்கலாம்,
6. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைனில் பாடம் நடத்தலாம்
7. நூறு நாள் வேலைத்திட்டங்களில் சமூக இடைவெளியுடன் பணிகளை தொடரலாம்
8. தபால் நிலையங்கள், பெட்ரோல்பங்க்குகள் உள்ளிட்டவை இயங்கும்
9. சாலை, ரயில், விமானங்கள் மூலம் அனைத்து சரக்கு போக்குவரத்தும் செயல்படும்
10. அனைத்து மருத்துவமனைகள், மருந்தகங்கள், லேப் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் இயங்க அனுமதி
11.  ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் செயல்படலாம்.
12. ஐடி சேவைகள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம்
13. கிராம அளவிலான இ சேவை மையங்கள் இயங்க அனுமதி
14. கூரியர் சேவைகளுக்கு அனுமதி
15. ப்ளம்பர், எலெக்ட்ரிசியன், மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோருக்கு அனுமதி
16. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி. பணியாளர்களை அழைத்து வர நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்
17. கிராமப்புறங்களில் செங்கல் சூளைகளுக்கு அனுமதி
18. கட்டுமானத் தொழிலாளர்கள் பணி நடைபெறும் இடத்தில் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதி.
19. 33% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம்.
ஏப்ரல் 20க்கு பிற மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

அதன்படி மே 3 வரை கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது.
1. பேருந்து, ரயில், விமான சேவைகள் இயங்காது
2. அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது
3. மாநிலங்களுக்கிடையே, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து கிடையாது. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
4.சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து, பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கக்கூடாது
5. ஆட்டோ உள்ளிட்ட டாக்சி சேவைகள் இயங்கக்கூடாது
6. மால்கள், தியேட்டர்கள், ஜிம், நீச்சல் குளம், கேளிக்கை பூங்கா, பார்கள் , மண்டபங்கள் மூடப்பட வேண்டும்
7. விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது
8. வழிபாடு தலங்கள் அனைத்திலும் பொதுமக்கள் அனுமதிக்கக்கூடாது. திருவிழாக்கள் நடத்தக்கூடாது
9. இறுதி சடங்கில் கலந்துகொள்ள 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது

மதி செய்திகள் 15.04.2020

மதி செய்திகள் 15.04.2020


*☯தமிழக தலைமை செயலாளருடன் மத்திய அரசு ஆலோசனை*

*ஆலோசனையில் உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி உள்ளிடோர் பங்கேற்பு*

*ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை குறித்து மத்திய அரசு ஆலோசனை*

*☯ஆயிரக்கணக்கானோர் குவிந்த மொத்த காய்கறிச் சந்தை..!*
_வியாபாரிகள் மட்டும் காய்கறி வாங்க அனுமதி_

திருச்சியில் மொத்த காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



திருச்சியில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க 8 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டன. அத்துடன் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பால் பண்ணை அருகே காய்கறி மொத்த வியாபாரம் செய்யப்படும் என்றும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மட்டும் வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு பொதுமக்கள் ஏராளமானோர் மொத்த காய்கறி சந்தையில் குவிந்தனர். இதனால், பழைய பால்பண்ணை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

வியாபாரிகளும், பொதுமக்களும் முகக் கவசம் அணியாததுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



மேலும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மொத்த காய்கறி சந்தை செயல்படும் இடம் குறுகலாக இருப்பதால், சில்லரை விற்பனை சந்தைகளை போன்று மொத்த விற்பனை சந்தையையும் தனித் தனி இடங்களில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

*☯நியூயார்க்கில் கரோனா வைரஸுக்கு பலி எண்ணிக்கை 10,000 கடந்தது*

நியூயார்க்கில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 -ஐ கடந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கரோனா வைரசின் மையமாக உள்ளது. நியூயார்க்கில் பரவி வரும் கரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் அந்த மாகாண அரசு ஈடுபட்டுள்ளது.

நியூயார்க்கில் மட்டும், சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் நியூயார்க்கில் கரோனா வைரஸ் பாதிப்பு 10,000-ஐ கடந்து இருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “ நியூயார்க்கில் பரிசோதனை செய்யப்படாத நிலையில் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஏராளானமானவர்கள் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ்ஸுக்கு நியூயார்க்கில் பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 ஆக இருக்கலாம்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்தி 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்

*☯மேகாலயாவில் கொரோனா பாதித்த ஒரே ஒரு நபரும் உயிரிழப்பு!*

ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த ஒரே ஒரு நபரும் இன்று (ஏப்., 15) உயிரிழந்தார். வட கிழக்கு மாநிலங்களில் அசாமை தொடர்ந்து இது இரண்டாவது உயிரிழப்பாகும்.

வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. இது வரை அம்மண்டலத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேகாலயா மாநிலத்தில், முதன் முதலாக திங்களன்று பெத்தானி மருத்துவமனையின் 69 வயது மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் சிகிச்சை பலனின்றி இன்று அம்மருத்துவமனயில் உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவமனையை சீல் வைத்த அதிகாரிகள், மற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளை தனிமைப்படுத்தி உள்ளனர்.

அம்மருத்துவரின் தொடர்பாளர்கள் யார் யாரென விசாரித்து வருகின்றனர். அவரது மருமகன் நியூயார்க்கில் இருந்து மார்ச் 16-ம் தேதி டில்லி வந்துள்ளார். அங்கிருந்து மணிப்பூரின் இம்பால் மற்றும் மேகலயாவின் ஷில்லாங்கிற்கு பயணித்துள்ளார். அவரை ஏப்ரல் 7 வரை தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அவருக்கு அறிகுறிகள் ஏதுமில்லை. இருப்பினும் அவர் மூலம் தொற்று பரவியிருக்கலாம் என விசாரிக்கின்றனர். மேகாலயாவில் ஊரடங்கு பகுதியளவு தளர்த்தப்பட்டிருந்தது. கொரோனாவால் முதல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, முழு ஊரடங்கை முதல்வர் அமல்படுத்தியுள்ளார்.

*☯#BREAKING கொரியர் நிறுவனங்கள் செயல்படலாம்*

*ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி; அத்தியாவசிய பொருட்களை மட்டும் விநியோகிக்கலாம்*

*- மத்திய அரசு*

*☯#BREAKING கடலூர்: ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்ததில் மேலும் 2 பேர் உயிரிழப்பு*

*ஏற்கனவே சந்திரகாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாயக்கிருஷ்ணன், சுந்தர் ஆகியோர் உயிரிழப்பு*

*☯#BREAKING தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு*

*1,56,314 வாகனங்கள் பறிமுதல்*

*ரூ.82,32,644 அபராதம் வசூல்*

*- தமிழக காவல்துறை*

*☯தனிமைப்படுத்தப்பட்டவர்களை சந்தித்த அமைச்சர் நிலோபர் கபில்... அதில் ஒருவருக்கு கொரோனா..!*

திருப்பத்தூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை அமைச்சர் நிலோபர் கபில் சந்தித்த நிலையில் அதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய வாணியம்பாடியை சேர்ந்த ‌8 பேரை மருத்துவமனையில் சேர்த்த அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 52 பேரை தனியார் கல்லூரி மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். பரிசோதனை முடிவில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுடைய உறவினர்களான 12 பேருக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள 40 பேரை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் ஆறு நாட்கள் மட்டும் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 9-ஆம் தேதி அமைச்சர் நிலோபர் கபில், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து 40 பேரை குறைந்தபட்சம் 14 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருக்காமல் அனுப்பியது குறித்து கேள்வி எழுந்த நிலையில், அனைவருக்கும் கடந்த 11-ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 13ஆம் தேதி வந்த ஆய்வின் முடிவில் அவர்களில் வாணியம்பாடி கோட்டை பகுதியை சேர்ந்த 48 வயது பெண்ணுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில், கொரோனா தொற்று ஏற்பட்ட பெண்ணை வழியனுப்பி வைத்த இரண்டு நாட்களுக்கு பிறகு, அதாவது கடந்த 11-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிலோபர் கபில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

*☯அசாம் மாநிலத்தில் மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டதால், மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.*

_கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு நேற்றோடு நிறைவு பெற்றது. இந்நிலையில் மே 3-ம் தேதி வரை தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை மது விற்பனை செய்ய அசாம் அரசு அனுமதி வழங்கியுள்ளது._

_இரண்டு வாரங்கள் கழித்து தற்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், ஏராளமானோர் மது வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். மதுக்கடைகளில் தனிமனித இடைவெளியுடன் மட்டுமே மது வாங்க வேண்டும், ஒருவருக்கு ஒரு பாட்டில் மதுபானம் மட்டுமே விற்கப்படும் போன்ற சில விதிமுறைகளின் படி மதுக்கடைகளில் வியபாரம் நடபெற்று வருகிறது._

*☯சென்னையில் சாலையோரம் கிடந்த 2 மாத ஆண் குழந்தை - காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்*

சென்னையில் சாலையோரம் கிடந்த 2 மாத ஆண் குழந்தையை காவல்துறையினர் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை அடையாறு பத்மநாபன் நகரின் சாலையோரத்தில் துணியில் சுற்றியபடி ஆண் குழந்தை ஒன்று கிடப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற சாஸ்திரி நகர் காவல்துறையினர் 2 மாத ஆண் குழந்தையை கண்டெடுத்தனர்.

செங்கல்பட்டில் ஊரடங்கு உத்தரவை ...

தொடர்ந்து குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் அண்ணா நகரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், குழந்தையை வீசி சென்றவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

*☯“ஊரடங்கு விதிகள் தளர்வு” : யார் யாருக்கு அனுமதி? ; யாருக்கு அனுமதி இல்லை ? - மத்திய அரசு அறிவிப்பு!*

_*ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.*_

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,000-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 377 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமானதைத் தொடர்ந்து மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அப்போது பேசிய அவர், ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என கூறியிருந்தார். அதன்படி ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

*“ஊரடங்கு விதிகள் தளர்வு” : யார் யாருக்கு அனுமதி? ; யாருக்கு அனுமதி இல்லை ? - மத்திய அரசு அறிவிப்பு!*

*யார் யாருக்கு அனுமதி ?*

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.

கட்டுமானப்பணிகள் மற்றும் வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளும் தொடங்க அனுமதி.

50% தொழிலாளர்களுடன் தேயிலை, காபி தோட்டங்கள் இயங்க அனுமதி.

100 நாள் வேலைத் திட்டத்தில் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு அனுமதி.

நெடுஞ்சாலைகளில் உள்ள மெக்கானிக் ஷாப்புகள், தாபாக்கள் இயங்க அனுமதி.

33% ஊழியர்களுடன் அரசு அலுவலங்கள் இயங்க அனுமதி.

தச்சுவேலை, பிளம்பர், எலெக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக் போன்ற தொழிலில் ஈடுபடுவோருக்கு அனுமதி.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம்.

கொரியர் சேவைகள் தொடரலாம்.

*“ஊரடங்கு விதிகள் தளர்வு” : யார் யாருக்கு அனுமதி? ; யாருக்கு அனுமதி இல்லை ? - மத்திய அரசு அறிவிப்பு!*

*யாருக்கு அனுமதி இல்லை ?*

நாடுமுழுவதும் மதுக்கடைகளை திறக்க அனுமதி இல்லை.

பொது போக்குவரத்து சேவைகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள், மால்கள், வணிக வளாகங்கள் இயங்க தடை.

அனைத்து வழிபாடு தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கக்கூடாது. திருவிழாக்கள் நடத்தக்கூடாது.

சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து, பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்க தடை.

அதுமட்டுமின்றி, தொற்று அதிகமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல் வைக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கவும்உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

*☯ஆசியாவில் இந்தியா மிக மோசம்.. இன்னும் 1 வாரத்தில் இரட்டிப்பு ஆகும்.. பகீர் கொரோனா புள்ளி விவரம்!*

டெல்லி: இந்தியாவில் தற்போது பரவும் வேகத்தில் கொரோனா பரவினால் இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் கேஸ்களில் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

கொரோனா பரவலை உலகம் முழுக்க தீவிரமாக கண்காணித்து வரும் ஜான் ஹாப்கின்ஸ் கோவிட் டிராக்கர் (John Hopkins Covid Tracker) மற்றும் மத்திய அரசின் சுகாதாரத்துறை இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பரவல் குறித்த [புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் எவ்வளவு வேகத்தில் கொரோனா பரவுகிறது என்று இந்த புள்ளி விவரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது மத்திய அரசின் புள்ளி விவரத்தின் படி மொத்தம் 11,439 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 390 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்

*வேகம் எப்படி உள்ளது*
கடந்த இரண்டு நாட்களில் இந்தியாவில் கொரோனா 24% உயர்ந்துள்ளது. அதற்கு முன் உள்ள இரண்டு நாட்களில் கொரோனா 28% ஆக பரவியது. இது கொஞ்சம் குறைந்துள்ளது. இந்தியாவில் தினமும் சராசரியாக 1010 பேர் வீதம் கொரோனா காரணமாக கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகிறது.

*இரட்டிப்பு ஆகிறது*
ஆம் இந்தியாவில் வாரத்திற்கு ஒருமுறை கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பு ஆகிறது. இதற்கு முன் 4 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா இரட்டிப்பு அடைந்த நிலையில் தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு ஆகிறது. இது கொஞ்சம் ஆறுதல் அளிக்க கூடிய விஷயம். ஆனாலும் இந்தியா ஆசியாவில் இருக்கும் மற்ற நாடுகளை விட மிக மோசமாக இதில் பின் தங்கி உள்ளது.

*☯#BREAKING அரசியல் கட்சியினர் உணவு, நிவாரணம் வழங்க அரசு விதித்த தடைக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு*

*- சென்னை உயர்நீதிமன்றம்*

*☯நேரடியாக நிவாரணப் பொருட்கள் வழங்கினால் நோய் தொற்று ஏற்படும் என அரசு தெரிவித்திருந்தது*

*உரிய கட்டுப்பாடுகளுடன் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்*

*☯எலெக்ட்ரீஷியன் பிளம்பர் ஆகிய அத்தியாவசியமாக பணிபுரிபவர்களுக்கு மத்திய அரசு அனுமதி*

*ரயில் விமானம் மெட்ரோ சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் மே 3ஆம் தேதி வரை இயங்காது*

*பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்க மத்திய அரசு உத்தரவு*

*திரையரங்குகள் வணிக வளாகங்கள் அரசியல் நிகழ்வுகள் வழிபாட்டுத்தலங்கள் பொதுக் கூட்டத்திற்கு தடை தொடரும்*

*ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நகரங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி*

*☯விவசாயம் சார்ந்த இயந்திர நிறுவனங்கள் பழுது நீக்கும் நிறுவனங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி*

*100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிகளை தொடரலாம் மத்திய அரசு அறிவிப்பு*

*144 தடை உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது*

*☯கொரோனா  ஊரடங்கு உத்தரவால், ஏப்ரல்-மே மாதங்களில் வீடுகளில் மின்சாரப் பயன்பாடுகள் அதிகரிக்க கூடும்.*  *வருமானமின்றித் தவித்து வரும் இந்தச் சூழலில், தமிழக அரசு மின்சாரக் கட்டணம் செலுத்துவதிலிருந்து சலுகைகள் மற்றும் விலக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்*
*தமிழச்சி தங்கபாண்டியன்*

*☯இனி 10-ம் வகுப்புப் பாடங்கள் தினந்தோறும் பொதிகை சேனலில் ஒளிபரப்பு*

பத்தாம் வகுப்பு பாடங்கள், இன்று (ஏப்ரல் 15) முதல் டிடி பொதிகை சேனலில் தினமும் காலை 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பப் படுகிறது.

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. கரோனா நோய்த்தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் 14-க்குப் பிறகு தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில் மீண்டும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பல்வேறு பாடங்களைக் கற்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இணையவழிக் கற்றல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கு, மேலும் பாடங்கள் எளிதில் சென்றடையும் வகையில் டிடி பொதிகை சேனலில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பாடங்களை எடுக்கின்றனர். இன்று (புதன்கிழமை) முதல் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

ஏற்கெனவே கல்வித் தொலைக்காட்சி மூலம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் தினமும் ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

*☯நிஜமுகம் செய்திகள்*

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

Breaking: ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது, மத்திய அரசு

#Breaking: ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது, மத்திய அரசு

* ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி

* கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை - மத்திய அரசு

* விவசாய உபகரணங்கள், உரங்கள் விற்பனை நிலையங்கள் செயல்படலாம்

* விவசாயப் பொருள் போக்குவரத்து தங்குதடையின்றி நடைபெறுவதை மாநில அரசுகள் உறுதி செய வேண்டும்

* மீன்பிடித் தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி

* தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்

* பால் உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம் போல நடைபெறலாம்

* ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி வங்கிகள், ஏ.டி.எம்-கள் செயல்படும்

* கல்வி நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம்

* அத்தியாவசியப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க தடை இல்லை

* ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி

* 100 நாள் வேலை திட்டத்தின்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்

* ஊரகப் பகுதியில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம்

* ஊரகப் பகுதியில் சிறு, குறு தொழில் சார்ந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்

* லாரிகள் பழுதுபார்க்கும் பட்டறைகள் இயங்க அனுமதி

* நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள் சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதி

* தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை

* பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம்

* 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது - மத்திய அரசு

* பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்

* எலக்ட்ரீசியன், பிளம்பர்,  மெக்கானிக்குகள், மரவேலை செய்பவர்கள் பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்
#COVID19 | #StayHome | #Lockdown2

மே மாதம் 3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

மே மாதம் 3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஏப்ரல் 20 க்கு மேல் முக்கியமான அத்தியாவசிய தேவைகளுக்கு விலக்கு கொடுக்க உள்ளோம் அது பற்றி நாளை அறிவிப்பு வரும்

கொரணா பரவலில் அடுத்த 1 வாரம் மிகவும் முக்கியமானது மக்கள் எச்சரிக்கையாக இருங்கள்

கொரணா பாதித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்

அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்களில் சில விதிவிலக்குகள் செய்யப்படும்

வீட்டில் உள்ள வயது மூத்தவர்களை குடும்பத்தினர் கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்

சமூக இடைவெளி என்பது இலட்சுமண ரேகை போன்றது தயவு செய்து மக்கள் அதை மீற வேண்டாம்

கொரணா ஒழிப்பில் அரசுக்கு ஒத்துழைப்பதில் நாட்டு மக்கள் அனைவரும் படை வீரர்களை போல செயல்படுகின்றனர் அவர்களுக்கு நன்றி !

கொரணா ஒழிப்பில் உலக நாடுகளுக்கு நம்ம இந்தியா முன் மாதிரியாக உள்ளது வளர்ந்த நாடுகள் கூட நம்மை போன்று முன் எச்சரிக்கைகளை எடுக்கவில்லை.

கொரணாவிற்கு எதிராக போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மேலும் காவல்துறை யினருக்கு உரிய மரியாதையை மக்கள் கொடுக்க வேண்டும்

பாரத பிரதமர் #மோடி ஜி மக்களிடம் உரை

புதன், 1 ஏப்ரல், 2020

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 190 பேருக்கு கொரோனா

*டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 190 பேருக்கு கொரோனா.*

*இன்று உறுதிசெய்யப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.*

*கொரானோ உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக:*

*110 New TN Dist Break-up*

*Tirunelveli - 6*

*Coimbatore - 28*

*Erode - 2*

*Theni - 20*

*Dindigul - 17*

*Madurai - 9*

*Tirupathur - 7*

*Chengalpet - 7*

*Sivagangai - 5*

*Tuticorin - 2*

*Tiruvarur - 2*

*Karur - 1*

*Kanchi - 2*

*Chennai - 1*

*Tiruvanamalai - 1*