ஞாயிறு, 14 ஜூன், 2020

செய்யும் தொழிலே தெய்வம்


செய்யும் தொழிலே தெய்வம்

 பெயர் : ஜெயந்தி (ப்ராமணப் பெண்)
அப்பா : பட்டு குருக்கள் (சிவன் கோயில் அர்ச்சகர்)
படிப்பு : MA
வேலை : மின்மயானத்தில் பிணம் எரிப்பு
(குறிப்பு : தொடர்ந்து, பிணவாடையோ அல்லது பிணம்எரியும் புகையையோ சுவாசித்தால், மிகஅதிகமான மறதி நோய் ஏற்படும். மேலும் வாழ்நாட்கள் குறையும்)

அர்ச்சகரோ, வெட்டியானோ... அவங்கவங்களுக்கு கிடைச்ச, வாய்ச்ச வேலைகள இயல்பா அவங்கவங்க செஞ்சுட்டுதான் இருக்காங்க. ஆனா சில வேலவெட்டி இல்லாத ஓசிச்சோத்து தெருநாய்கள்தான், வேலைல பேதம்பிரிச்சு... பிரச்சனைய உண்டு பண்றாங்க. 'அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கணும்' ன்னு, போராடுன குரூப்பு... 'அனைத்து சாதியினரையும் வெட்டியான் ஆக்கணும்' ன்னு, போராடுமா ? போராட்டம் பண்ணி அர்ச்சகர் வேலை வாங்குனா... கோயில் சொத்தையும், உண்டியலையும் ஆட்டைய போடலாம். போராட்டம் பண்ணி  வெட்டியான் வேலை வாங்குனா... நெத்திக் காசும், வாய்கரிசியும்தான் மிஞ்சும் !!!

 பயத்துக்கு சவால் விடும் ஜெயந்தி..

பிராமண இன பெண் பிணத்தை எரிக்கிறார்..

நாமக்கல் அருகே கூலிப்பட்டி கிராமத்துல பிறந்தவ நான். அப்பா பட்டுகுருக்கள், சிவன் கோயில் அர்ச்சகர். எங்க வீட்டுல மூணு பொண்ணுங்க.

நான்தான் கடைசிங்கிறதால, அப்பாவுக்கு என் மேல ரொம்ப பாசம். எம்.ஏ முடிச்ச நேரத்துல வேற ஜாதியைச் சேர்ந்த வாசுதேவனைக் காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

 எங்கம்மா, அக்கா எல்லோரும் என்னை ஒதுக்க, அப்பா மட்டும் எதிர்க்கல. கணவர் வீட்டுல என்னை ஏத்துக்கிட்டாங்க. எனக்கு ரெட்டைக் குழந்தைகள் பிறந்தன..

என் அப்பா திடீர்னு இறந்துட்டாரு. அவரை அடக்கம் பண்ணும்போது, பெண்ணா இருந்தாலும் நான் அங்கே இருந்தேன். அப்போ ஓர் உடலா இல்லாம, தெய்வமாதான் தெரிஞ்சாரு எங்கப்பா.

 நான் தையல் வேலை கத்துக்கிட்டு, அதை செய்திட்டிருந்தேன். தையல் மெஷினை மிதிக்க மிதிக்க வயித்துவலி அதிகமாக...

 டாக்டர், வயித்துல ரெண்டரை கிலோ கட்டி இருக்கிறதா சொன்னாங்க. சீரியஸான நிலையில ஆஸ்பத்திரியில அட்மிட் ஆனேன்.

உயிர் பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டருங்க சொல்லிட்டாங்க. எங்கப்பாதான் தெய்வமா இருந்து அறுவை சிகிச்சையில் என்னைக் காப்பாத்திக் கொடுத்தார்.

வேலைக்குப் போக வேண்டிய கட்டாயம் என்ற குடும்பச் சூழலில்தான், நாலு வருஷத்துக்கு முன்ன இந்த மின்மயானத்துல தோட்டப் பராமரிப்பு வேலைக்காக வந்தேன்.

இடிபாடுகளாவும், மண்டை ஓடு, எலும்புகளாவும் இருந்த இடத்தை, நானும், மலர்னு ஒரு பெண்ணும் சேர்ந்து மூணே மாசத்துல பச்சைப்பசேல் தோட்டமா மாத்தினோம்.

சில மாசங்கள்ல, சிதையூட்டிட்டு இருந்த ஆண்கள் வேலையை விட்டுப் போக, நான் அந்த வேலையைச் செய்றேன்னு நிர்வாகத்துக்கிட்ட கேட்டேன். ‘உன்னோட கணவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா வேலை தர்றோம்'னு சொல்லிட்டாங்க.

வீட்டுல எல்லாரையும் சம்மதிக்க வெச்சு இந்த வேலையில சேர்ந்தேன். என்னோட பணி நேர்த்தியைப் பார்த்து, ஒரே வருஷத்துக்குள்ள, என்னையே இந்த மின்மயானததுக்கு மேனேஜர் ஆக்கிச்சு நிர்வாகம்’’ என்ற ஜெயந்தி, தொடர்ந்தார்.

‘‘இறந்தவங்களோட உறவினர்களை எல்லாம் வெளிய அனுப்பிட்டு, நான், எனக்கு உதவியா மலர்னு ரெண்டு பொம் பளைங்க மட்டும், டிராலியில உடலை வைக்கிறதுல இருந்து, கடைசி வரைக்கும் எல்லா வேலைகளையும் செய்தாலும், கொஞ்சம்கூட பயந்ததில்ல. அதுக்காக சிதையூட்டும் வேலை சுலபமானதும் இல்ல.

இயற்கை மரணம் எய்தினவங்களை சிதையூட்டும் போது, 45 நிமிஷத்துல சாம்பலை எடுத்திடலாம்.

ஆனா, போஸ்ட் மார்ட்டம் பண்ணின உடலா இருந்தா, சிதையூட்டின கொஞ்ச நேரத்துலயே, சூட்டுல எல்லா உறுப்புகளும் தனியா சிதறி விழும்.

 அதை எல்லாம் மறுபடியும் எடுத்து, மரக்கட்டை மேல போடணும். சிரமமான அந்த வேலைகளை, தைரியமா பண்ணியிருக்கேன்.

ஒரு நாளில் அதிகபட்சமா 9 உடல்கள் வரை, பின்னிரவு வரைகூட இருந்து சிதையூட்டி இருக்கேன். அநாதைப் பிணங்களை இலவசமா சிதையூட்டுவேன்.

 சின்ன வயசுல, பக்கத்துல யாராச்சும் முட்டை சாப்பிட்டாகூட மூக்கை மூடிக்குவேன்.

இப்போ பிண வாடை பழகிப் போச்சு. அதான் வாழ்க்கை!’’ என்ற ஜெயந்தியின் கண்களிலும் படர்கிறது சிரிப்பு.

ஞாயிறு, 7 ஜூன், 2020

Covid 19 Spreading up Quickly In India


Covid 19 Spreading up Quickly In India

March 05.         30  Cases
March15.         114 Cases
March 25.        657 Cases
March 31.      1397Cases
April 05.          4289 Cases
April 10.         7600. Cases
April 20.        18539 Cases
April 30.        34863 Cases
May 05.         42836 Cases
May 06.         46524 Cases
May 07.          49854 Cases
May 08.          52952 Cases
May 09.          56342 Cases
May 10.           59662 Cases
May 11.            67152  Cases
May 12.           70756  Cases
May 13.           74281   Cases
May 14.           78003  Cases
May 15.           81970.  Cases
May 16.           85940  Cases
May 17.            90927  Cases
May. 18.           96129  Cases
May. 19.          101139  Cases
May. 20.          105750 Cases
May. 21.           112359 Cases
May. 22.          118376  Cases
May. 23.          125101.  Cases
May. 24.          131868. Cases
May. 25.          138845. Cases
May. 26.          145380. Cases
May. 27.           151767.  Cases
May. 28.          158333. Cases
May. 29.          165799. Cases
May. 30.          173763. Cases
May. 31.           182143. Cases
June  1.            190535. Cases
June  2.           198706. Cases
June 3.            207615. Cases
June 4.            216919. Cases
June 5.            226770. Cases
With this speed it will be
16 lakh up to end of this month

*VERY IMPORTANT*

🔆Please Do not leave home to buy anything, because the worst time is starting.

🔆As per studies
The horrible thing that happened in Italy was that this *CONTAGIOUS WEEK* which was ignored there and so thousands of cases came up together.

*HUMBLE REQUEST*
🔅DON'T VISIT ANYONE  🔅DON'T MEET ANYONE, 🔅DON'T EVEN VISIT CLOSE FAMILY, AS THIS IS NOT ONLY FOR YOUR SAFETY BUT YOUR LOVED ONES TOO.
🔅As This time you will be at the PEAK STAGE OF TRANSITION.

PLEASE .!!

*Send this message to all your relatives and friends*

புத்துயிர் பெற்ற ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம்


 புத்துயிர் பெற்ற ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம்.

 *தென்காசி* மாவட்டத்தின் வறண்ட பகுதிகளில் ஒன்றாக விளங்கும் கீழப்பாவூர், கடையம், ஆலங்குளம் ஒன்றிய பகுதிகள் பயன்பெறும் வகையில் ராமநதி - ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நபார்டு வங்கி மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 66 ஆண்டு கால மக்களின் கனவு நனவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

தென்காசி  மாவட்டத்தில் விவசாயத்திற்கு மிகவும் பிரசித்திப் பெற்ற பகுதி கீழப்பாவூர் ஒன்றியம். இதன் வடபகுதிகளான கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, குலசேகரப்பட்டி, மேலப்பாவூர், சடையப்புரம், கருமடையூர், மூலக்கரையூர், சாலைப்புதூர், மகிழ்வண்ணநாதபுரம், பெத்தநாடார்பட்டி, அருணாப்பேரி, நாகல்குளம், ராஜபாண்டி, வெள்ளகால், கழுநீர்குளம், மேலபட்டமுடையார்புரம், அடைக்கலப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் நெல், மிளகாய், தக்காளி, சிறிய வெங்காயம், பல்லாரி, வெண்டைக்காய், சுரைக்காய், அவரைக்காய், பூசணிக்காய், தடியங்காய் உட்பட பல்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்த பகுதிகளுக்கு மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியான புளியரை, கண்ணுப்புளிமெட்டு, செங்கோட்டை பகுதியில் இருந்து சிற்றாறு மூலம் மேலப்பாவூர், கீழப்பாவூர் பெரியகுளம், அருணாப்பேரி, நாகல்குளம் மற்றும் சாலைப்புதூர் கடம்பன்குளத்துக்கு தண்ணீர் வருகிறது. இதன் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன.
இதேபோல் ராமநதி மூலம் கடையம், மந்தியூர், கோவிந்தபேரி, பாப்பாங்குளம், பொட்டல்புதூர், மாதாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களுக்கும், கடனாநதி மூலம் ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், மன்னார்கோவில், பிரம்மதேசம், சிவசைலம், கருத்தப்பிள்ளையூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்களுக்கும் பாசன வசதி பெறுகின்றன. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள், பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, கர்நநாடகா, ஆந்திரா புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கும் விற்பனைக்கு செல்கின்றன. கீழப்பாவூர் ஒன்றியத்தின் வடபகுதியில் விவசாயம் செழித்தாலும், அதன் நடுப்பகுதி மற்றும் கடையம், ஆலங்குளம் ஒன்றியத்தின் ஒரு பகுதிகளுக்குட்பட்ட குத்தாலப்பேரிகுளம், நாராயணப்பேரி குளம், சென்னெல்தாகுளம், புதுக்குளம், நாராயணப்பேரி முடித்தான்குளம், பத்மநாதப்பேரிகுளம், புங்கன்குளம், கைக்கொண்டார்குளம், வெள்ளாளன்புதுக்குளம், மைலப்புரம் ஆலந்தாகுளம், தெற்கு மடத்தூர் வடக்கு மற்றும் தெற்கு குளங்கள், பண்டாரகுளம் உள்ளிட்ட 15 குளங்கள் தண்ணீர் பெருகாமல் வறண்டே காணப்படுகின்றன.
இதன் காரணமாக திப்பணம்பட்டி, கல்லூரணி, சிவநாடானூர், நாட்டார்பட்டி, ஆவுடையானூர், அரியப்புரம், சென்நெல்தாபுதுக்குளம், பூவனூர், சிவநாடானூர், மைலப்புரம், வெங்கடாம்பட்டி, சின்னநாடானூர், தெற்கு மடத்தூர், வெய்க்காலிபட்டி, கரிசலூர் உட்பட  100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாயத்தை கைவிட்டு வேலை தேடி வெளியூருக்கு சென்று விட்டனர். பலரும், விவசாய நிலங்களை கிடைத்த விலைக்கு விற்கும் அவலத்துக்கு தள்ளப்பட்டனர். ஒரு சில விவசாயிகள்  கிணற்று தண்ணீர் மூலம் நெல், பல்லாரி, தக்காளி,  மிளகாய், வெ ண்டை, சிறிய வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பல்வேறு இன்னல்களுக்கு இடையே மகசூல் எடுக்கின்றனர். இந்நிலை தற்போதல்ல... கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்கிறது. மேலும் அரியப்புரம், ஆவுடையானூர், திப்பணம்பட்டி, சென்னெல்தாபுதுக்குளம், நாட்டார்பட்டி, கொண்டலூர், பூவனூர், சிவநாடானூர், மைலப்புரம், வெங்கடாம்பட்டி, சின்னநாடானூர், தெற்கு மடத்தூர், பொட்டல்புதூர், வெய்க்காலிபட்டி, கரிசலூர், பாவூர்சத்திரம் செட்டியூர் உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீர் தேவையும் முழுமையாக பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது.
இந்த பகுதியில் உள்ள குளங்களை நிரப்புவதற்கும், கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் ராமநதி - ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு. இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென விவசாயிகளும், பொதுமக்களும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த 2005ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, நெல்லையில் நடந்த விழாவில் ராமநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் ரூ.3.64 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். ஆனாலும் இத்திட்டம் கிடப்பில் ேபாடப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு கீழப்பாவூர் மற்றும் கடையம் ஒன்றிய பகுதி விவசாயிகளை கொண்ட ராமநதி மேல்மட்ட கால்வாய் போராட்டக்குழு உருவாக்கப்பட்டு, பாவூர்சத்திரத்தில் மாபெரும் விவசாயிகள் மாநாட்டை  நடத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனால் இத்திட்டம் மீண்டும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வேகத்தை ஏற்படுத்தியது. மேலும் இத்திட்டத்தை நிறைவேற்றிட வலியுறுத்தி சட்டசபையில் அப்போதைய தென்காசி எம்எல்ஏ சரத்குமாரும் தொடர்ந்து வலியுறுத்தினார்.
இந்நிலையில் தமிழக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளரின் உத்தரவுப்படி தலைமை பொறியாளர்கள் மற்றும் அதிகாரிகள் இத்திட்டத்திற்கு ரூ.42 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து முதல்வரின் பார்வைக்கு கொண்டு சென்று ஒப்புதலை பெற்றனர். இத்திட்டத்தின் அவசியத்தை உணர்ந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2015 செப்.25ம் தேதி தமிழக சட்டசபையில் 110 விதியின் கீழ் ராமநதி ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் ரூ.42 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்.கடந்த 2015 டிச.22ம் தேதி இதற்காக அரசாணை வெளியிடப்பட்டு அதன் பின் ஆய்வு பணிக்காக ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்து மண் பரிசோதனை, கால்வாய் செல்லும் பாதையில் தனியார் மற்றும் அரசு நிலங்கள் எவ்வளவு நிலம் கையகப்படுத்த வேண்டும் என்பது போன்ற பணிகள் 2016ம் ஆண்டு நிறைவு பெற்று வரைவு திட்டம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அனுமதி பெறப்பட்டது.
ஆனால் வழக்கம்போல் பைல்கள் தேங்கிக் கிடந்தன. இதையடுத்து தற்போதைய தென்காசி எம்எல்ஏ செல்வமோகன்தாஸ் பாண்டியன் இத்திட்டத்தின் அவசியம் குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து 2017-2018ம் ஆண்டுகளில் நிலம் கையகப்படுத்துவதற்கான கால்வாய் செல்லும் பாதைகள் உள்ள தனியார் நிலங்களில் நில அளவை பணிகள் நிறைவுற்று 80% நிலம் உரிமையாளர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது. இந்நிலங்களை கையகப்படுத்துவதற்கான நிர்வாக ஒப்புதல் பெறும் கோப்பு அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டு அதில் பலமுறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதியாக நிர்வாக ஒப்புதல் பெறும் கோப்பு தற்போது நிதி துறையின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. நிர்வாக ஒப்புதல் கிடைத்தவுடன் நிலங்கள் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கால்வாய் வெட்டும் பணிக்கான மதிப்பீடு திருத்தி அமைக்கப்பட்டு முன்பு 42 கோடி என்று இருந்த மதிப்பீடு தற்போது 41.08 கோடியாக மறுமதிப்பீடு செய்து இந்த கோப்பு அரசின் பரிந்துரையுடன் நபார்டு வங்கியின் ஒப்புதலுக்கு கடந்த 2019 ஜூலை மாதம் அனுப்பப்பட்டது. விவசாயத்தின் முக்கியத்துவம் கருதி நபார்டு வங்கி இத்திட்டத்தை மேற்கொள்ள நிதியுதவி வழங்க முடிவு செய்து அறிவித்தது. இதையடுத்து ராமநதி - ஜம்புநதி பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில்  இத்திட்டத்திற்கு ரூ.41.50 கோடி ஒதுக்கீடு கடந்த 26.2.2020ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. 66 ஆண்டுகால கனவு திட்டம் விரைவில் தொடங்கும் என்பதால் இப்பகுதி விவசாயிகள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

திருச்சி சிவா - சசிகலா புஷ்பாவின் அந்தரங்க புகைப்படங்கள்..! தாராளமாக மக்கள் பார்க்கலாம்! நீதிமன்றம் கொடுத்த அனுமதி!


சசிகலா புஷ்பா அதிமுக கட்சியில் ராஜ்யசபா எம்பியாக இருந்து வந்தார். இதனைத் தொடர்ந்து அந்த கட்சியை விட்டு வெளியேறி பாஜகவில் தற்போது இணைந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக திருச்சி சிவா மற்றும் சசிகலா புஷ்பாவின் ஒருசில அந்தரங்க புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து சசிகலா புஷ்பா இம்மாதிரியான புகைப்படங்கள் என்னுடைய பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தவே பரப்பப்பட்டு வருகிறது. ஒரு சிலர் திட்டமிட்ட உள்நோக்கத்துடன் தான் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனை சமூக வலைதளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று சசிகலா புஷ்பா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சமீபகாலமாகவே டெல்லி உயர் நீதிமன்றத்தில் சசிகலா புஷ்பா தொடர்ந்த இந்த வழக்கு நடைபெற்று வந்தது. தற்போது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி சஹாய் எண்ட்லா அவர்கள் வெளியிட்டிருக்கிறார். அதாவது மாண்புமிகு நீதிபதி வெளியிட்டுள்ள அந்த தீர்ப்பில், மனுதாரர் சசிகலா புஷ்பாவின் அந்தரங்கம் என்பது எது? மக்கள் பிரதிநிதியாக இருக்கக் கூடியவர் யாரையெல்லாம் சந்திக்கிறார் என்று அறியக் கூடிய உரிமை பொதுமக்களுக்கு உண்டு என்பதை அலசி ஆராய வேண்டிய கட்டாயம் உள்ளது. 

மக்களின் பிரதிநிதியாக கருதப்படும் அவர் யாரை சந்திக்கிறார் என்று மக்கள் அறிந்து கொள்வது என்பது நியாயம்தான். தன் கட்சியோடு சம்பந்தப்படாத மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த ஆண் ஒருவருடன் மூடிய கதவுகளுக்குப் பின்னால் சந்தித்து பழகக்கூடியதைப்பற்றி அறிந்து கொள்வதற்கான முழு உரிமையும் பொதுமக்களுக்கு உள்ளது என்று நீதிபதி கூறியிருக்கிறார். இந்த சந்திப்பு பொது நலனுக்காக என்று கூறவும் முடியாது அதே சமயத்தில் பொதுநலனுக்காகத்தான் இந்த சந்திப்பு நிகழ்ந்தது என்றும் சசிகலா தரப்பு வாதிடவும் இல்லை. 

ஆகையால் பேஸ்புக், யூட்யூபில் வெளிவந்திருக்கும் புகைப்படங்களை நீக்குவதற்காக தொடரப்பட்ட வழக்கில் இந்த புகைப்படங்களை நீக்கவோ அல்லது பார்ப்பதற்கு தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளையோ விதிக்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளார். மேலும் புகைப்படத்தை நீக்குவதற்கான உத்தரவையும் ஃபேஸ்புக் , கூகுள் மற்றும் யூட்யூப் ஆகிய நிறுவனத்திற்கு வழங்க முடியாது என்றும் கூறியிருக்கிறார். ஆகையால் இது குறித்து தொடரப்பட்ட சசிகலாவின் வழக்கு நீதிபதிகள் தள்ளுபடி செய்யப்பட்டது மேலும் பேஸ்புக் நிறுவனத்திற்கு இரண்டு லட்சமும் யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனத்திற்கு தலா ஒரு லட்சமும் அபராதம் அளிக்குமாறு சசிகலா புஷ்பா இருக்கு உத்தரவிட்டுள்ளனர். 

புதன், 3 ஜூன், 2020

'தினத்தந்தி' குழுமம் ஹலோ எப்எம் ‘தி இந்து குழுமம்’ கலைஞர் தொலைகாட்சி, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நியூஸ் 18 தமிழ்நாடு மற்றும் சில ஊடகங்களைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் மற்றும் மக்கள் தொலைகாட்சியிலும் அடாவடியாக ஊழியர்கள் அநியாய பணிநீக்கம்சம்பளக்குறைப்பு! விகடனை தொடர்ந்து வேந்தர் தொலைகாட்சியில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அநியாய பணிநீக்கம்! கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை வஞ்சிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து குரல்கொடுப்போம்!


'தினத்தந்தி' குழுமம் ஹலோ எப்எம் ‘தி இந்து குழுமம்’ கலைஞர் தொலைகாட்சி, டைம்ஸ் ஆஃப் இந்தியா, நியூஸ் 18 தமிழ்நாடு மற்றும் சில ஊடகங்களைத் தொடர்ந்து நியூஸ் 7 தமிழ் மற்றும் மக்கள் தொலைகாட்சியிலும் அடாவடியாக
ஊழியர்கள் அநியாய பணிநீக்கம்,சம்பளக்குறைப்பு! விகடனை தொடர்ந்து வேந்தர் தொலைகாட்சியில் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அநியாய பணிநீக்கம்! கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை வஞ்சிக்கும் நிறுவனங்களுக்கு எதிராக ஒருங்கிணைந்து குரல்கொடுப்போம்!


கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதை தொடர்ந்து, நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும் சம்பள பிடித்தம் செய்யக் கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகமும், தொழிலாளர் நலத்துறை அமைச்சகமும் அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளன. தமிழக அரசும் நிறுவனங்களுக்கு இதே வேண்டுகோளை விடுத்துள்ளது.

ஆனால், மத்திய மாநில அரசுகளின் இந்த உத்தரவையும், வேண்டுகோளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் ஏறக்குறைய அனைத்து ஊடக நிறுவனங்களும் சம்பளக்குறைப்பை செய்துவருகின்றன. ஒரு சில நிறுவனங்கள் இதுவரை தொழிலாளர்கள் செய்த பணியை மதிக்காமல், அவர்களுடைய எதிர்காலத்தை கருத்தில்கொள்ளாமல் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.

ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய, திமுகவின் ஊதுகுழலான கலைஞர் தொலைகாட்சி,  கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் 40 சதவீதம் வரை ஊதிய குறைப்பு செய்துள்ளது. தன்னை கம்யூனிஸ்ட்டு என்றும் தொழிலாளர்களின் தோழன் என்றும் காட்டிக்கொள்ளும் என்.ராம் தலைமையிலான இந்து குழுமமும் 30 சதவீதம் வரை சம்பள குறைப்பு செய்துள்ளது. இதேபோல், சம்பளத்தை குறைத்ததுடன், 176 தொழிலாளர்களை ஒரே இரவில் ஈவு இரக்கமின்றி பணிநீக்கம் செய்துள்ளது விகடன் நிர்வாகம். தொழிலாளர் இயக்கத்தை தோற்றுவித்த காரல் மார்க்சும் எங்கள் கட்சியின் முன்னோடிகளில் ஒருவர் என்று கூறிக்கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சி, அதன் சார்பாக நடத்தப்படும் மக்கள் தொலைகாட்சியில் அநியாயமாக 50 சதவீதம் சம்பளகுறைப்பை அமுல்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முன்னோடி பத்திரிகைநிறுவனமான தினத்தந்தி, தனது ஹலோ எப்எம் ரேடியோவிலும், தொலைகாட்சியிலும் பணியாற்றும் சுமார் 100 பேரை சட்டத்திற்குப் புறம்பாக பணிநீக்கம் செய்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரரான அம்பானியால் நடத்தப்படும் நியூஸ் 18 குழுமம் கொஞ்சமும் நியாயமின்றி 10 சதவீதம் சம்பளத்தை குறைத்துள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய கல்வி குழுமமான எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கோடீஸ்வரர் பாரிவேந்தரால் நடத்தப்படும் வேந்தர் தொலைகாட்சி 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை இரக்கமின்றி வேலை நீக்கம் செய்துள்ளது. இந்தியாவில் அதிகம்பேரால் வாசிக்கப்படும் ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியா, சம்பளகுறைப்பு மற்றும் ஆட்குறைப்பு செய்துள்ளது.

இந்த வரிசையில் தற்போது நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியும் இணைந்துள்ளது. கடந்த 8 மாதங்களாக தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வந்த நியூஸ் 7 தமிழ் நிறுவனம் தற்போது திடீரென்று, ஆபிஸ் பாய் முதல் ஆசிரியர் வரை அனைவருக்கும் 15 சதவீதம் சம்பளத்தை குறைத்துள்ளது. இப்போதும், அந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத சம்பளபாக்கி வைத்துள்ளது.

சம்பள குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனங்கள் அனைத்தும் கோடீஸ்வரர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள். தொழிலாளர்களின் வியர்வையும், ரத்தமுமே இன்று அவர்கள் பணத்தில் புரள்வதற்கும், படோபடமாக வாழ்வதற்கும் காரணமாகும். ஆனால் அந்த நன்றியை மறந்த அவர்கள், தொழிலாளர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட அநியாயத்தை செய்துவருகின்றனர்.

இதுவரை உலகம் கண்டிராதவகையில், கொரோனா என்ற பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஆனால், இப்படிப்பட்ட சூழலிலும், சிறிய அளவு லாபம் குறைவதைக்கூட முதலாளிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அத்துடன் தொழிலாளர்களின் உழைப்பால் தாங்கள் சேர்த்து வைத்த சொத்தின் ஒரு சிறு பகுதியைக்கூட இதுபோன்ற அவசரகாலத்தில் செலவழிக்க அவர்களுக்கு மனமில்லை. மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தாலும் அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பிணத்தை அடக்கம் செய்வதில் அவர்கள் லாபம் பார்க்க துணிவார்கள் என்பதையே இது உணர்த்துகிறது.

பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஒரு குடும்பம் இருப்பதோ, அந்த குடும்பத்தில் பாலுக்காக ஏங்கும் ஒரு குழந்தை இருப்பதோ, அந்த தொழிலாளியின் சம்பளம்தான் அந்த குழந்தையின் பசியை போக்கும் என்பதோ இந்த முலாளிகளுக்கு தெரியாதா என்ன? இவை அனனைத்தையும் தெரிந்துகொண்டுதான், சிறிதளவு லாபத்தைக் குறைத்துக்கொள்ளகூட அவர்கள் தயாராக இல்லை.

ஒரு நிறுவனத்தில் தொடங்கிய சம்பள குறைப்பு தற்போது அனைத்து நிறுவனங்களுக்கும் பரவியுள்ளது. ஒரு நிறுவனத்தில் தொடங்கிய ஆட்குறைப்பை தற்போது மற்ற நிறுவனங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இதை இப்படியே விட்டால் மனசாட்சியை கழற்றிவைத்துவிட்டு இன்னும் பல கொடுமைகளை செய்யத்துணியும் இந்த நிறுவனங்கள்.

ஆகவே, பத்திரிகைதுறையில் பணியாற்றும் அனைவரும் ஒருங்கிணைந்து நமக்கு எதிராக தொடுக்கப்படும் இந்த அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டிய தருணம் இது.

இந்த நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள சட்டமீறல் தொடர்பாக, பேரிடர் மேலாண்மைச்சட்டம், தொழில் தகராறு சட்டம் மற்றும் குறைந்தபட்ச ஊதிய சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக புகார் அனுப்பப்பட்டது. இந்த புகாரை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை, மாநில தொழிலாளர் நலத்துறைக்கு கடந்த 28.05.2020 அன்று உத்தரவிட்டுள்ளது.

ஆகவே, மத்திய தொழிலாளர் நலத்துறையின் உத்தரவின்படி,  மாநில தொழிலாளர் நலத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

சம்பள குறைப்பு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும், அநியாய பணிநீக்கத்தை உடனே நிறுத்த வேண்டும் என்றும், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்றும் அனைவரும் அமைப்பாக திரண்டு நிறுவனங்களை வலியுறுத்த வேண்டும் என்று அழைக்கிறோம்.

கொள்ளை நோயிலும், கொள்ளை லாபத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் இந்த நிறுவனங்களின் இந்த அநியாயத்தை எதிர்த்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், அனைத்து பத்திரிகையாளர்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து தளங்களிலும் போராடும் என்று உறுதியளிக்கிறோம்.

ஞாயிறு, 17 மே, 2020

பிக் நியூஸ் 17/05/2020 !

பிக் நியூஸ் 17/05/2020 !

கொரோனா பாதிப்பிலிருந்து தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 634 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியா முழுவதும் பொது முடக்கத்தை மே 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது :பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,224 ஆக அதிகரிப்பு.

பொது இடங்கள் பணியிடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.
தனிமனித இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்,எச்சில் துப்பக்கூடாது - மத்திய அரசு.

அத்தியாவசிய தேவை தவிர இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை பொதுமக்கள் வெளியே வரக்கூடாது - மத்திய உள்துறை அமைச்சகம்.

கர்ப்பிணிகள் , 65 வயதுக்கு மேற்பட்டோர் , 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் - மத்திய உள்துறை அமைச்சகம்.

விமானம், ரயில் சேவை, திரையரங்குகள், வணிக வளாகங்கள் செயல்பட விதித்த தடை தொடரும் - மத்திய உள்துறை அமைச்சகம்.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் மதம் சார்ந்த இடங்களில் பொதுமக்கள் கூட்டமாக கூட தடை நீட்டிப்பு - மத்திய உள்துறை அமைச்சகம்.

முடிதிருத்தும் கடைகள் திறப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்.
சிவப்பு மண்டலங்களிலும் சலூன்களை திறப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் - மத்திய அரசு.

பேருந்து சேவைகளை அனுமதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம்.

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு பேருந்து செல்ல நிபந்தனையுடன் அனுமதிக்கலாம் - மத்திய உள்துறை அமைச்சகம்.

ஹோட்டல்கள், மதுபான கூடங்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள் நீடிக்கிறது - மத்திய உள்துறை அமைச்சகம்.

மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்திற்கு தடை ஏதும் இல்லை - மத்திய உள்துறை அமைச்சகம்.

திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் 50 பேர் வரை பங்கேற்கலாம்; தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பார்வையாளர்கள் இல்லாமல் விளையாட்டு அரங்குகளை திறக்க அனுமதி - மத்திய உள்துறை அமைச்சகம்.

நிறுவனங்கள் இயன்ற அளவு பணியாளர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் - மத்திய அரசு.

நீச்சல் குளங்கள், பூங்காக்கள், மதுபான கூடங்களுக்கு விதிக்கப்பட்ட தடையும் நீட்டிப்பு - மத்திய அரசு.

அனுமதிக்கப்பட்ட கடைகளில் 5 நபர்களுக்கு மேல் கூட தடை; தனிமனித இடைவெளி அவசியம் - மத்திய அரசு.

உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை நீட்டிப்பு டோர் டெலிவரி செய்ய அனுமதி - மத்திய அரசு.

தற்போதைக்கு டிக்கெட் முன்பதிவு இல்லை - ஏர் இந்தியா நிறுவனம்.

கேரள மாநிலத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - முதல்வர் பினராயி விஜயன்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இறப்பு எண்ணிக்கை 74 லிருந்து 78 ஆக அதிகரிப்பு.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்களில் கடந்த 14 நாட்களாக புதிதாக கொரோனா தொற்று பதிவாகாத நிலையில் 46 பகுதிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது - சென்னை மாநகராட்சி.

ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும் - தமிழக முதல்வர் பழனிசாமி.

25 மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு இ-பாஸ் தேவையில்லை.
அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் சென்றுவர போக்குவரத்து அனுமதி - முதல்வர் பழனிசாமி.

அரசுப் பணிகளுக்காக பேருந்தில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே செல்ல அனுமதி - தமிழக அரசு.

தனியார் தொழிற்சாலை பேருந்துகளில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே செல்ல அனுமதி - தமிழக அரசு.

வேன்களில் 7 பேர், பெரிய வகை கார்களில் 3 பேர், சிறிய கார்களில் 2 பேர் செல்ல அனுமதி - தமிழக அரசு.

சென்னை நீங்கலாக 100 நபர்களுக்கு குறைவாக உள்ள தொழிற்சாலைகள் முழு பணியாளர்களுடன் இயங்கலாம் - தமிழக அரசு.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை அழைத்துவர மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை - தமிழக முதல்வர்.

பிற மாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை சிறப்பு ரயில் மூலம் படிப்படியாக அழைத்துவரவும் நடவடிக்கை - தமிழக முதல்வர்.

+2 விடைத்தாள் திருத்தும் பணி மட்டும் நடைபெற விலக்கு அளிக்கப்படுகிறது - தமிழக முதல்வர் பழனிசாமி.

12 மாவட்டங்களில் திரையரங்குகள், ஜிம், கடற்கரை, பூங்காக்கள், அருங்காட்சியங்கள் செயல்பட தடை.
திருமண நிகழ்ச்சிகளுக்கு தற்போதுள்ள நடைமுறைகள் தொடரும் - தமிழக முதல்வர் பழனிசாமி.

100 நாள் வேலைத்திட்டத்தில் 100 சதவிகித பணியாளர்களை பயன்படுத்த தமிழக அரசு அனுமதி.

தமிழகத்தில் மருத்துவ சிகிச்சைக்கு மட்டும் சென்று வர டாக்ஸி, ஆட்டோவுக்கு அனுமதி - தபிழக முதல்வர் பழனிசாமி.

தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் எந்தத் தளர்வும் கிடையாது - தமிழக அரசு.

கொரோனா பாதிப்பால் ஸ்டான்லி மருத்துவமனையில் 2 பெண்கள் உயிரிழப்பு.

சிவப்பு மண்டல பகுதிகளிலும் நாளை முதல் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படும் - மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சஞ்சய் பட்டாச்சாரியா.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மகாராஷ்டிராவில் சிறை கைதிகள் 7,200க்கும் மேற்பட்டோர் விடுதலை.

ஆம்பன் புயல் நாளை வடக்கு ஒடிசாவில் கரை கடக்கிறது.

திங்கள், 4 மே, 2020

பக்தர்களின்றி நடந்த மீனாட்சி திருக்கல்யாணம்

பக்தர்களின்றி நடந்த மீனாட்சி திருக்கல்யாணம்

இந்துசமய அறநிலையத்துறை இணையதளம், யூடியூப், ஃபேஸ்புக் நேரலை மற்றும் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்ட திருக்கல்யாண நிகழ்வை வீடுகளில் இருந்தே பார்த்த பக்தர்கள், மீனாட்சி, சுந்தரேஸ்வரரை வணங்கினர்.


மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் திருக்கல்யாண நிகழ்வு பக்தர்கள் இல்லாமல் நடைபெற்றது. எனினும், பக்தர்கள் காணும் வகையில் சமூகவலைதளங்களில் நேரலை செய்யப்பட்டது.


மதுரையே குலுங்கும் அளவிற்கு நடைபெறும் சித்திரை திருவிழாவிற்கு தனிச் சிறப்பு உண்டு. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில், திருக்கல்யாண நிகழ்வை காண்பதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மக்கள் பாண்டிய நாட்டை நோக்கி படையெடுப்பர்.
திருக்கல்யாணத்திற்கு, மீனாட்சியின் உடன்பிறப்பான கள்ளழகர் அழகர் மலையில் இருந்து மதுரை வந்து, ஆற்றில் இறங்குவதை காண, வைகையில் மக்கள் வெள்ளம் கரைபுரளும்.


வருடமெல்லாம் உழைத்துக் களைத்த மக்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் விழாவான சித்திரை திருவிழா, கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.


ஆனால், மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில் திருக்கல்யாண நிகழ்வு நடைபெறும் என்றும் அது நேரலையில் ஒளிபரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண விழா காலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.


இதில் சிவாச்சாரியார்கள், மங்கள வாத்தியக் கலைஞர்கள், பாதுகாப்புப் பணிக்காக 3 போலீசார் உள்பட 42 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.


சன்னதியின் முதல் பிரகாரத்தில் உள்ள சேத்தி மண்டபத்தில் மீனாட்சி, சுந்தரேஸ்வர் கல்யாண கோலத்தில் எழுந்தருளினர். வழக்கத்திற்கு மாறாக முதல்முறையாக பக்தர்களின் ஆரவாரமின்றி திருக்கல்யாணம் நடைபெற்றது.


இந்துசமய அறநிலையத்துறை இணையதளம், யூடியூப், ஃபேஸ்புக் நேரலை மற்றும் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பப்பட்ட திருக்கல்யாண நிகழ்வை வீடுகளில் இருந்தே பார்த்த பக்தர்கள், மீனாட்சி, சுந்தரேஸ்வரரை வணங்கினர்.

வெள்ளி, 1 மே, 2020

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை


கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை.

*பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.*

*சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும் - மத்திய அரசு.*

*தமிழகம: சிவப்பு, பச்சை, ஆரஞ்ச்*

*தமிழகத்தில் 12 மாவட்டங்கள் சிவப்பு நிற மண்டலங்களாகவும், 24 மாவட்டங்கள் ஆரஞ்சு நிற மண்டலங்களாகவும், 1 மாவட்டம் பச்சை நிற மண்டலமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.*


*🟥சிவப்பு நிற மண்டலங்கள்:*

1. சென்னை

2. மதுரை

3. நாமக்கல்

4. தஞ்சாவூர்

5. செங்கல்பட்டு

6. திருவள்ளூர்

7. திருப்பூர்

8. ராணிப்பேட்டை

9. விருதுநகர்

10. திருவாரூர்

11. வேலூர்

12.காஞ்சிபுரம்

*🟧ஆரஞ்சு நிற மண்டலங்கள்:*

1. தேனி

2. தென்காசி

3. நாகப்பட்டினம்

4. திண்டுக்கல்

5. விழுப்புரம்

6. கோவை

7. கடலூர்

8. சேலம்

9. கரூர்

10.தூத்துக்குடி

11. திருச்சிராப்பள்ளி

12. திருப்பத்தூர்

13. கன்னியாகுமரி

14. திருவண்ணாமலை

15. ராமநாதபுரம்

16. திருநெல்வேலி

17. நீலகிரி

18. சிவகங்கை

19. பெரம்பலூர்

20. கள்ளக்குறிச்சி

21. அரியலூர்

22. ஈரோடு

23. புதுக்கோட்டை

24. தருமபுரி

*🟩பச்சை நிற மண்டலங்கள்:*

1. கிருஷ்ணகிரி

.இந்தியா முழுவதும் உள்ள பகுதிகள்




    *STAY HOME 🏡 STAY SAFE*

     *●❯────────────────❮●*

.      

விரிவான தகவல்: கட்டுப்பாடுகள் என்னென்ன?

 விரிவான தகவல்: கட்டுப்பாடுகள் என்னென்ன?

இரவு 7 மணி முதல் காலை 6 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.

சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்.

முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டு கண்டிப்பாக வெளிவரக்கூடாது.

மேலும் 2 வாரங்களுக்கு சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை.

பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

அத்தியாவசியம் அல்லாத சேவைகளுக்கு அனுமதி கிடையாது.

நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டப் பணிகளை நடத்துவதற்கு அனுமதி.

கிராமப்பகுதிகளில் அனைத்து வகையான சிறு கடைகளையும் திறப்பதற்கு அனுமதி.

தங்கியிருந்து வேலை செய்யும் தொழிலாளர்களுடன் நகர்புறங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்- மத்திய அரசு.

சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33% பணியாளர்களுடன் மட்டும் செயல்பட வேண்டும்.

ஏணைய ஊழியர்கள் வீட்டில் இருந்தவாறே பணி என்ற வகையில் செயல்பட வேண்டும்- மத்திய அரசு.

சிவப்பு மண்டலங்களில் 2 சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டும் பயணிக்கலாம்.

சிவப்பு மண்டலங்களில் நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயங்க அனுமதி- மத்திய அரசு.

கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம்.

மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம்.

4 சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 3 பேரும், இரு சக்கர வாகனங்களில் ஓட்டுநருடன் 2 பேரும் செல்லலாம்- மத்திய அரசு.

பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்து சேவை.

பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துங்களை இயக்க அனுமதி- மத்திய அரசு.

பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படவும் 2 வாரம் தடை நீட்டிப்பு; சரக்கு வாகனங்கள் இயங்கலாம்; எந்த மாநில அரசும் தடை செய்யக் கூடாது- மத்திய அரசு.

புதன், 22 ஏப்ரல், 2020

சம்பளத்துக்கு ஆப்பு வச்சிட்டார்

*வச்சிட்டாருய்யா.. விகடன் ஓனரும் சம்பளத்துக்கு ஆப்பு வச்சிட்டார்*

கொரோனா பரவலை மக்களுக்கு நொடிக்கு நொடி அறிவித்து அலெர்ட் செய்து வரும் ஊடக நிறுவனங்கள் இப்போது நடக்கும் ஊரடங்கால் விற்பனை குறைந்திருக்கிறது. விளம்பரங்கள் வீழ்ச்சியடைந்திருக்கிறது. கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வேலை நீக்கம், ஊதியவெட்டு போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஊடக நிறுவன உரிமையாளர்கள் அறிவிப்பது அதிகரித்து வருகிறது..

ஏற்கெனவே 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை காரணம் காட்டி இதேபோன்று ஆட்குறைப்பு என்ற பெயரால் ஏராளமானோரை வேலைநீக்கம் செய்தனர். தற்போது ஊடக நிறுவனங்கள் ஊரடங்கை காரணம் காட்டி நிறுவன மூடலாக மாற்றப் போவதாக பயமுறுத்துகின்றன. முன்னரே நம் குரூப்-பில் சொன்னது போல் , இந்தியாவின் மிகச் செழிப்பான ஊடக நிறுவனமான டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் பெருமளவில் ஊழியர்களை வேலையை விட்டு துரத்தியிருக்கிறது. கம்யூனிஸ்ட் பாணியில் சொல்வதானால் அந்நிறுவனத்தன் செல்வ செழிப்பிற்கு இந்த தொழிலாளிகளை வேலையில் வைத்திருப்பதால் அவர்கள் எதையும் இழக்க மாட்டார்கள், அந்த நிறுவனத்தின் ஒட்டு மொத்த லாபத்தோடு ஒப்பிட்டால் ஊழியருக்கான தொகை என்பது மிகமிக குறைவாகும். இந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவும் லாபம் சேகரிப்பதற்கும் 20 ஆண்டுகளுக்கு மேலாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களை கூட கேள்வி கேட்பாரின்றி வெளியேற்றி இருக்கிறார்கள்.

டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் தான் வெளியிட்டு வரும் ஞாயிறு சிறப்பு இணைப்பு இதழை (சன்டே மேகசின்) மூடிவிட்டது. அதில் பணிபுரிந்த நோனாவாலியா தமது முகநூல் பக்கத்தில், “ எனது மேலதிகாரி பூனம்சிங் ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம், சன்டே மேகசின் பிரிவில் பணிபுரியும் ஒட்டுமொத்த ஊழியர்களையும் வேலையை விட்டு செல்லுங்கள் என்று சொல்லிவிட்டார். 24 வருடங்களாக நான் நேசித்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படுகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ரொம்ப கேஷூவலாக 10 முதல் 30 சதவீதம் வரை சம்பளத்தை வெட்டிய இந்தியன் எக்ஸ்பிரஸ்இந்தியன் எக்ஸ்பிரசின் சிஇஏ ஜார்ஜ் வர்கீஸ் சில நாட்களுக்கு முன்பு தனது ஊழியர்களுக்கு ஒரு குறிப்பை சுற்றுக்கு விட்டுள்ளார். அதில் “நமது விளம்பர வருமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. கிடைக்கும் எல்லா தரவுகளும் மிக மோசமான நாட்கள் இனிமேல்தான் வரப்போகின்றன. ஊழியர்கள் 10 – 30 சதவீதம் வரை சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். நிர்வாகத்தின் உயர்நிலையில் உள்ளவர்களும், ஆசிரியர்களும் சம்பளம் இல்லாமலேயே வேலை செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்

பல மாநிலங்களில், நாளிதழ்கள் தங்களது பல பதிப்புகளை மூடியுள்ளன. “நாளிதழ்கள் தினசரி வருவாய் இழப்பை சந்திப்பதாக” இந்தியன் நியூஸ் பேப்பர் சொசைட்டி கூறியிருக்கிறது. இதிலிருந்து மீள காகித்தின் மீதான இறக்குமதி வரி 5 சதவீதத்தையும் ரத்து செய்ய வேண்டும். 2 வருடங்களுக்கு வரி விடுமுறை வேண்டும். அரசு விளம்பரங்களுக்கான கட்டணத்தை 50 சதவீதம் உயர்ந்த வேண்டும். அச்சு ஊடகங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை 100 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று கோருகிறார்கள்.

இதைபற்றியெல்லாம் பேசுகிறவர்கள் ஜர்னலிஸ்ட் என்று கெத்தாய் பணி புரியும் தொழிலாளர்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று பேசுவதே கிடையாது.சம்பளம் இல்லாத விடுமுறையை திணிக்கும் தி குவிண்ட்இணைய இதழ் தி குவிண்ட் அதனுடைய ஊழியர்களில் 50 சதவீதம் பேரை சம்பளம் இல்லாத விடுப்பில் விரட்டி இருகிறது. மற்றவர்களுக்கு சம்பள குறைப்பை செய்திருக்கிறது.

காட்சி ஊடகத்திலும் கொடுமைநாடு முழுவதும் நூற்றுக்கணக்கான காட்சி ஊடக ஊழியர்கள் தங்களது வாழ்க்கையை பணையம் வைத்து கொரோனா வைரஸ் பரவல் குறித்தும், ஊரடங்கின் தாக்கம் குறித்தும் செய்தி சேகரிக்கிறார்கள். சென்னையிலுள்ள சத்யம் டிவி -யில் பணியாற்றும் ஊழியர்கள் 25க்கும் அதிகமானோர்கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களா

இச்சூழலிலும் ஊழியர்களாக களத்தில் செயல்படும் ஊடகவியலாளர்களுக்கு ஊக்கம் தர வேண்டும். மாறாக, உடனடி சம்பள வெட்டும், வேலையிலிருந்து விரட்டுவதும் ஊடகத்துறையினரின் ஊக்கத்தை பாதிக்கிறது. குறிப்பாக,  தன் சொத்தை விற்று நிர்வாகத்தை நடத்தி சாதனை புரிந்த விகடன் எம் டி பாலசுப்பிரமணியன் கட்டிக் காத்த நிறுவன ஓனர் கீழ்கணும் கடிதத்தை தன் ஊழியர்களுக்கு அனுப்பி இருக்கிறார்

அக்கடிதத்தில்

அன்புள்ள விகடன் குழும பணியாளர்களே,

உலகம் இதுவரை பார்த்திராத கொடுமையான கொரோனா நோய் பரவியிருக்கும் சோதனையான இத்தகைய காலகட்டத்தில் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் பாதுகாப்பாக இருக்க, நான் பிரார்த்திக்கிறேன்.

நம்முடைய மீடியா துறைக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. என்றாலும் நம் அனைவரின் பாதுகாப்புக் கருதி, மார்ச் 22 -ம் தேதியே 'வீட்டிலிருந்து பணி' என்பதை நாம் நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டோம்.

கடந்த ஒரு மாதகாலமாக விகடனின் நலன்விரும்பிகள், விளம்பரதாரர்கள், முகவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், நிர்வாகப் பணியாளர்கள், ஓவியர்கள், கட்டுரையாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என அனைவருடனும் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி வருகின்றீர்கள். தனித்தனியே இருந்தாலும், பற்பல கோணங்களில் இணைந்தே சிந்தித்து, நன்கு உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள், கட்டுரைகள் மற்றும் வீடியோக்கள் எனக் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்து வருகிறீர்கள். உங்களின் படைப்புகள், நம் வாசகர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் என பலதரப்பட்டவர்களின் பாராட்டுதல்களையும் பெற்றுவருகின்றன என்பதைப் பெருமையுடன் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த இக்கட்டான தருணத்தில்... கடமை என்பதையும் தாண்டி, சிறப்பாகச் செயல்பட்டதன் வெற்றியே... நமக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பாராட்டுகள். இதற்காக அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கிடையே, விகடன் குழுமத்தின் முக்கியமான நான்கு பிரிவுகளில், மூன்று பிரிவுகள் இந்த ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதையும் நீங்கள் நன்றாகவே அறிந்திருப்பீர்கள்.

94 ஆண்டுகளாக நமது நிறுவனத்தின் இதயமாகச் செயல்பட்ட நம் இதழ்கள் கடந்த ஒரு மாதமாக வாசகர்களை நேரடியாகச் சென்றடைய முடியவில்லை. டெலிவிஷன் தொடர்கள், காலவரையின்றி நிறுத்தப்பட்டுவிட்டன. விகடனுக்குக் குறிப்பிடத்தக்க வருவாயைத் தரக்கூடிய - வாசகர்களுக்குப் பயனளிக்கக்கூடிய விகடனின் பிரத்யேக நிகழச்சிகள் மற்றும் விகடன் குழும விருதுகள் உள்ளிட்டவையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்கிறது.

சோதனையான இந்தக் காலகட்டத்தில் நம்முடைய டிஜிட்டல் பிரிவு மட்டுமே சற்று ஆறுதல் தரும்விதத்தில் நடைபோடுகிறது. டிஜிட்டல் என்பதைப் பொறுத்தவரை, இதுகாலம் வரை அதில் நாம் செய்துவந்த முதலீடுகள் தற்போது ஓரளவுக்கு வெளிச்சத்தைக் காணஆரம்பித்துள்ளன. ஆனால், இந்த டிஜிட்டல் வளர்ச்சி வரவிருக்கும் காலகட்டத்தில் பெருகினாலும், நம்முடைய ஆதார ஸ்ருதியாக இருக்கும் இதழ்கள் அனைத்தும் பழைய நிலைக்குத் திரும்பினாலும்கூட, இந்தப் புதிய உலகில் நம்முடைய அடுத்தகட்ட பாய்ச்சல்களுக்கு அவற்றால் போதுமான அளவுக்குத் தோள்கொடுக்க முடியாது என்பதே உண்மை.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நானும் உங்களுடைய துறைத் தலைவர்களும் அலுவலகச் செலவினங்களை குறைப்பதற்காகக் கடும்முயற்சிகள் செய்துவருகிறோம். கூடவே, வருவாயைப் பெருக்குவதற்கான பல்வேறு முயற்சிகளையும் புதுப்புது யுக்திகளையும் ஆலோசித்துச் செயல்படுத்தவும் திட்டமிட்டு வருகிறோம்.

தற்போதைய சூழலிலிருந்து நாம் மீள்வதற்கு செலவினங்களைக் குறைக்கவேண்டும் என்பதுதான் நம் கண்முன்னே தெரியும் உடனடி சர்வரோகநிவராணி. இதற்காக நம்முடைய பல்வேறு துறைகளின் தலைவர்கள் (Leaders), தங்களுடைய சம்பளத்தை குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர். இது, மிகவும் ஆக்கப்பூர்வமான ஒரு முடிவு.

இதைப் பெருமையுடன் நோக்கும் அதே தருணம், அனைத்துத் துறை தலைவர்களுடனும் ஆலோசித்து, கனத்த இதயத்துடன் மற்றுமொரு முடிவையும் எடுத்துள்ளோம். அதாவது, பணியாளர்கள் ஒவ்வொருவரின் மாதாந்திரச் சம்பளத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு தொகையை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்பதுதான் அந்த முடிவு. இந்த 2020-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள மூன்றுமாத காலத்துக்கு இந்தச் சம்பள ஒத்திவைப்பு முதற்கட்டமாக நடைமுறையில் இருக்கும். நாட்டின் பொருளாதாரம் மற்றும் நம் அலுவலகத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றைக் கனக்கில் கொண்டு ஜூலை 2020-.ல் சம்பள ஒத்திவைப்பு மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதனடிப்படையில் சம்பள ஒத்திவைப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.

சம்பள ஒத்திவைப்பு என்பது, நிறுவனம் லாபத்துக்குத் திரும்பி, பழையபடி பணவரத்து அதிகரித்த பின் வாபஸ் பெறப்படக்கூடிய வகையிலான ஒரு திட்டமே! இத்தகைய முயற்சிதான், எந்தவொரு நிறுவனத்துக்கும் இதுபோன்ற சூழல்களில் உடனடியாகக் கைகொடுக்கக்கூடிய ஒரு யுக்தி. நம்முடைய அலுவலகத் துறைத் தலைவர்கள், நிறுவனத்தின் நிதிநிலையை நன்கு அறிந்தவர்கள். சம்பள ஒத்திவைப்பு எந்தமாதிரியான சூழலில் மறுஆய்வு செய்யப்படும் என்பதையும் அவர்கள் நன்றாக அறிந்தவர்களே. வெகுவிரைவில் சம்பள ஒத்திவைப்பு திரும்பப் பெறப்படும் வகையில் நிறுவனத்தின் நிதிநிலையை உயர்த்த அனைவரும் பாடுபடுவோம்.

நிதி பாதுகாப்பு என்பது ஒவ்வொரு குடும்பத்தையும் திறம்பட நடத்துவதற்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு குடும்பத் தலைவனாக நானும் நன்கு அறிவேன். நாம் அனைவருமே எதிர்பாராத, சிக்கலான ஒரு காலகட்டத்தைக் கடக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். செலவினங்களைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மட்டுமே இதற்கு உடனடித் தீர்வு என்பதைத்தான் அனைவருமே நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்தக் கடுமையான சூழல் மிகவிரைவில் மறைந்து புதியஉலகம் தோன்றும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. அத்தகைய புதியஉலகுக்கு கட்டியங்கூறுவதுபோல நம்முன்னே புதுப்புது யதார்த்தங்கள் இப்போதே வரிசைகட்ட ஆரம்பித்துள்ளன. அவற்றையெல்லாம் எதிர்கொள்ள முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வலிமையுடன் செயல்பட தொடங்குவோம், வளமான புதிய உலகத்தில் தடங்கல்கள் இன்றி நாம் பயணிப்போம். நம்முடைய வாசகர்கள், விளம்பரதாரர்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் தேவையறிந்து புத்தாக்கங்களுடன் கடுமையாகவும் புத்திசாலித்தனமாகவும் செயலாற்றி, புதிய உலகத்தின் சவால்கள் அனைத்தையும் எதிர்கொண்டு சாதிப்போம்.

'வலிமையானவர்கள், புத்திசாலித்தனமானவர்கள் என்பதால் மட்டும்  இவ்வுலகில் பிழைத்திருக்க முடியாது.

மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதாலும் மட்டும்தான் எப்போதுமே பிழைத்திருக்க முடியும்'

என்று சார்லஸ் டார்வின் கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த உலகம் நேரடியாக உணர்ந்து கொண்டிருக்கும் காலகட்டமிது

நாமும் மாற்றங்களுக்கு உட்படுவோம்... வெற்றிபெறுவோம். நாம் எதிர்பார்ப்பதைவிட முன்கூட்டியே வெற்றியைக் கொண்டாடும் நிலையை நோக்கி முன்னேறுவோம்.

அனைவருக்கும் ஒரு வேண்டுகோள்...வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். தேவைப்படும் சமயத்தில் மட்டும் தக்க பாதுகாப்புக் கவசங்களுடன் வெளியில் நடமாடுங்கள்.

கொரோனா பரவலை தடுப்பதற்காகத்.  தங்களின் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் மனதாரப் போற்றுங்கள்!

நன்றி

அன்புடன்

பா.சீனிவாசன்.
இயக்குநர்
விகடன் மீடியா சர்வீசஸ் (பி) லிமிடெட்

அப்படீன்னு சொல்லி இருக்கார்

இத்தனைக்கும் இன்றைய ஊடக முதலாளிகளுக்கு (மட்டும்) நெருக்கமான பிரதமர்மோடி நிர்வாகங்கள் ஊரடங்கு நேரத்தில் சம்பளத்தை குறைக்க வேண்டாம், வேலையை விட்டு நீக்க வேண்டாம் என்றெல்லாம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதை கூட சட்டை செய்யமல் அதிகரிக்கும் இந்த அடாவடி போக்குக்கு தொடர்ந்து கமா விழுந்தபடி தொடர்வதை வேதனையுடன் பார்த்துக் கொண்டுதான் இருக்க வேண்டும் போலிருக்கிறது..

அமெரிக்க அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய அமெரிக்கர் நியமனம்; டிரம்ப் அறிவிப்பு

*அமெரிக்க அறிவியல் வாரிய உறுப்பினராக இந்திய அமெரிக்கர் நியமனம்; டிரம்ப் அறிவிப்பு*

வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டின் தேசிய அறிவியல் வாரியத்தின் உறுப்பினராக இந்திய அமெரிக்கரான சுதர்சனம் பாபு என்பவரை அதிபர் டொனால்டு டிரம்ப் நியமனம் செய்துள்ளார். இதன்படி, 6 ஆண்டுகள் அவர் இந்த பதவியில் நீடித்திடுவார்.

கடந்த 1986ம் ஆண்டு தமிழகத்தின் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படிப்பும், கடந்த 1988ம் ஆண்டு சென்னை ஐ.ஐ.டி.யில் முதுநிலை தொழில்நுட்பம் (தொழிற்சாலை உலோக பிரிவியல், வெல்டிங்) பிரிவிலும் படித்து பட்டம் பெற்றுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டமும் பெற்றுள்ளார்.

அவர், இன்டர்டிசிபிளினெரி ரிசர்ச் மற்றும் கிராஜுவேட் கல்விக்கான பிரெடிசன் மைய இயக்குனராக இருந்து வருகிறார். தயாரிப்பு மற்றும் உலோக பிரிவியலில் 21 வருட அனுபவம் கொண்டவராகவும் உள்ளார்.

சுதர்சனம் பாபு, அமெரிக்க அறிவியல் வாரியத்தின் உறுப்பினரான 3வது இந்திய அமெரிக்கராவார். அவருக்கு முன் அரிசோனா பல்கலைக்கழகத்தின் சேதுராமன் பஞ்சநாதன் மற்றும் வெர்மோன்ட் பல்கலைக்கழகத்தின் சுரேஷ் வி. கரிமெல்லா ஆகிய இருவரும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர்.

புதன், 15 ஏப்ரல், 2020

ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை



ஏப்ரல் 20க்கு பிறகு இயங்க அனுமதிக்கப்பட்டவை:


1. அனைத்து வேளாண் நடவடிக்கைகள் செயல்படலாம்
2. மீன் பிடி தொழிலில் ஈடுபடலாம்
3. 50% பணியாளர்களுடன் டீ, காபி, ரப்பர் தோட்டங்களில் பணிகளை செய்யலாம்
4. பால் கொள்முதல், விற்பனை உள்ளிட்ட பணிகளை தொடரலாம்
5. வங்கிகள் வழக்கமான நேரங்களில் சேவைகளை வழங்கலாம்,
6. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைனில் பாடம் நடத்தலாம்
7. நூறு நாள் வேலைத்திட்டங்களில் சமூக இடைவெளியுடன் பணிகளை தொடரலாம்
8. தபால் நிலையங்கள், பெட்ரோல்பங்க்குகள் உள்ளிட்டவை இயங்கும்
9. சாலை, ரயில், விமானங்கள் மூலம் அனைத்து சரக்கு போக்குவரத்தும் செயல்படும்
10. அனைத்து மருத்துவமனைகள், மருந்தகங்கள், லேப் உள்ளிட்ட மருத்துவ சேவைகள் இயங்க அனுமதி
11.  ஊரகப் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் செயல்படலாம்.
12. ஐடி சேவைகள் 50% பணியாளர்களுடன் இயங்கலாம்
13. கிராம அளவிலான இ சேவை மையங்கள் இயங்க அனுமதி
14. கூரியர் சேவைகளுக்கு அனுமதி
15. ப்ளம்பர், எலெக்ட்ரிசியன், மெக்கானிக், தச்சர் உள்ளிட்டோருக்கு அனுமதி
16. சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு அனுமதி. பணியாளர்களை அழைத்து வர நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு வசதிகளுடன் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்
17. கிராமப்புறங்களில் செங்கல் சூளைகளுக்கு அனுமதி
18. கட்டுமானத் தொழிலாளர்கள் பணி நடைபெறும் இடத்தில் தங்கியிருந்து வேலை செய்ய அனுமதி.
19. 33% ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் இயங்கலாம்.
ஏப்ரல் 20க்கு பிற மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என்றும், ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

அதன்படி மே 3 வரை கீழ்காணும் நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளது.
1. பேருந்து, ரயில், விமான சேவைகள் இயங்காது
2. அனைத்து கல்வி நிறுவனங்களும் இயங்காது
3. மாநிலங்களுக்கிடையே, மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து கிடையாது. மருத்துவ தேவைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
4.சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து, பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்கக்கூடாது
5. ஆட்டோ உள்ளிட்ட டாக்சி சேவைகள் இயங்கக்கூடாது
6. மால்கள், தியேட்டர்கள், ஜிம், நீச்சல் குளம், கேளிக்கை பூங்கா, பார்கள் , மண்டபங்கள் மூடப்பட வேண்டும்
7. விழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது
8. வழிபாடு தலங்கள் அனைத்திலும் பொதுமக்கள் அனுமதிக்கக்கூடாது. திருவிழாக்கள் நடத்தக்கூடாது
9. இறுதி சடங்கில் கலந்துகொள்ள 20 பேருக்கு மேல் அனுமதி கிடையாது

மதி செய்திகள் 15.04.2020

மதி செய்திகள் 15.04.2020


*☯தமிழக தலைமை செயலாளருடன் மத்திய அரசு ஆலோசனை*

*ஆலோசனையில் உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி உள்ளிடோர் பங்கேற்பு*

*ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை குறித்து மத்திய அரசு ஆலோசனை*

*☯ஆயிரக்கணக்கானோர் குவிந்த மொத்த காய்கறிச் சந்தை..!*
_வியாபாரிகள் மட்டும் காய்கறி வாங்க அனுமதி_

திருச்சியில் மொத்த காய்கறி சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்காக ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



திருச்சியில் காய்கறிகள் வாங்க பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க 8 இடங்களில் தற்காலிக காய்கறி சந்தைகள் அமைக்கப்பட்டன. அத்துடன் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பழைய பால் பண்ணை அருகே காய்கறி மொத்த வியாபாரம் செய்யப்படும் என்றும் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை மட்டும் வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிச் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்றிரவு பொதுமக்கள் ஏராளமானோர் மொத்த காய்கறி சந்தையில் குவிந்தனர். இதனால், பழைய பால்பண்ணை அருகே உள்ள சர்வீஸ் சாலையில் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன.

வியாபாரிகளும், பொதுமக்களும் முகக் கவசம் அணியாததுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



மேலும், தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மொத்த காய்கறி சந்தை செயல்படும் இடம் குறுகலாக இருப்பதால், சில்லரை விற்பனை சந்தைகளை போன்று மொத்த விற்பனை சந்தையையும் தனித் தனி இடங்களில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

*☯நியூயார்க்கில் கரோனா வைரஸுக்கு பலி எண்ணிக்கை 10,000 கடந்தது*

நியூயார்க்கில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 -ஐ கடந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவின் நியூயார்க் நகரம் கரோனா வைரசின் மையமாக உள்ளது. நியூயார்க்கில் பரவி வரும் கரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் அந்த மாகாண அரசு ஈடுபட்டுள்ளது.

நியூயார்க்கில் மட்டும், சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று பரவியுள்ளது. 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் காரணமாக பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில் நியூயார்க்கில் கரோனா வைரஸ் பாதிப்பு 10,000-ஐ கடந்து இருக்கலாம் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் தரப்பில், “ நியூயார்க்கில் பரிசோதனை செய்யப்படாத நிலையில் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் ஏராளானமானவர்கள் பலியாகி உள்ளனர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ்ஸுக்கு நியூயார்க்கில் பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 ஆக இருக்கலாம்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்தி 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்

*☯மேகாலயாவில் கொரோனா பாதித்த ஒரே ஒரு நபரும் உயிரிழப்பு!*

ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்த ஒரே ஒரு நபரும் இன்று (ஏப்., 15) உயிரிழந்தார். வட கிழக்கு மாநிலங்களில் அசாமை தொடர்ந்து இது இரண்டாவது உயிரிழப்பாகும்.

வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. இது வரை அம்மண்டலத்தில் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், மேகாலயா மாநிலத்தில், முதன் முதலாக திங்களன்று பெத்தானி மருத்துவமனையின் 69 வயது மருத்துவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர் சிகிச்சை பலனின்றி இன்று அம்மருத்துவமனயில் உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவமனையை சீல் வைத்த அதிகாரிகள், மற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளை தனிமைப்படுத்தி உள்ளனர்.

அம்மருத்துவரின் தொடர்பாளர்கள் யார் யாரென விசாரித்து வருகின்றனர். அவரது மருமகன் நியூயார்க்கில் இருந்து மார்ச் 16-ம் தேதி டில்லி வந்துள்ளார். அங்கிருந்து மணிப்பூரின் இம்பால் மற்றும் மேகலயாவின் ஷில்லாங்கிற்கு பயணித்துள்ளார். அவரை ஏப்ரல் 7 வரை தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். அவருக்கு அறிகுறிகள் ஏதுமில்லை. இருப்பினும் அவர் மூலம் தொற்று பரவியிருக்கலாம் என விசாரிக்கின்றனர். மேகாலயாவில் ஊரடங்கு பகுதியளவு தளர்த்தப்பட்டிருந்தது. கொரோனாவால் முதல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, முழு ஊரடங்கை முதல்வர் அமல்படுத்தியுள்ளார்.

*☯#BREAKING கொரியர் நிறுவனங்கள் செயல்படலாம்*

*ஆன்லைன் வணிக நிறுவனங்கள் இயங்க அனுமதி; அத்தியாவசிய பொருட்களை மட்டும் விநியோகிக்கலாம்*

*- மத்திய அரசு*

*☯#BREAKING கடலூர்: ஆலப்பாக்கத்தில் போதைக்காக மெத்தனால் குடித்ததில் மேலும் 2 பேர் உயிரிழப்பு*

*ஏற்கனவே சந்திரகாஸ் என்பவர் உயிரிழந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாயக்கிருஷ்ணன், சுந்தர் ஆகியோர் உயிரிழப்பு*

*☯#BREAKING தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1,97,536 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிப்பு*

*1,56,314 வாகனங்கள் பறிமுதல்*

*ரூ.82,32,644 அபராதம் வசூல்*

*- தமிழக காவல்துறை*

*☯தனிமைப்படுத்தப்பட்டவர்களை சந்தித்த அமைச்சர் நிலோபர் கபில்... அதில் ஒருவருக்கு கொரோனா..!*

திருப்பத்தூர் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை அமைச்சர் நிலோபர் கபில் சந்தித்த நிலையில் அதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பிய வாணியம்பாடியை சேர்ந்த ‌8 பேரை மருத்துவமனையில் சேர்த்த அதிகாரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 52 பேரை தனியார் கல்லூரி மற்றும் தனியார் திருமண மண்டபங்களில் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர். பரிசோதனை முடிவில் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களுடைய உறவினர்களான 12 பேருக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மீதமுள்ள 40 பேரை பரிசோதனைக்கு உட்படுத்தாமல் ஆறு நாட்கள் மட்டும் தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்.

இதனைத்தொடர்ந்து கடந்த 9-ஆம் தேதி அமைச்சர் நிலோபர் கபில், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து 40 பேரை குறைந்தபட்சம் 14 நாட்கள் கண்காணிப்பில் வைத்திருக்காமல் அனுப்பியது குறித்து கேள்வி எழுந்த நிலையில், அனைவருக்கும் கடந்த 11-ஆம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 13ஆம் தேதி வந்த ஆய்வின் முடிவில் அவர்களில் வாணியம்பாடி கோட்டை பகுதியை சேர்ந்த 48 வயது பெண்ணுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில், கொரோனா தொற்று ஏற்பட்ட பெண்ணை வழியனுப்பி வைத்த இரண்டு நாட்களுக்கு பிறகு, அதாவது கடந்த 11-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நிலோபர் கபில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

*☯அசாம் மாநிலத்தில் மதுபானம் விற்க அனுமதி வழங்கப்பட்டதால், மதுக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.*

_கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 21 நாட்கள் ஊரடங்கு நேற்றோடு நிறைவு பெற்றது. இந்நிலையில் மே 3-ம் தேதி வரை தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், காலை ஏழு மணி முதல் மாலை ஐந்து மணி வரை மது விற்பனை செய்ய அசாம் அரசு அனுமதி வழங்கியுள்ளது._

_இரண்டு வாரங்கள் கழித்து தற்போது மதுக்கடைகள் திறக்கப்பட்டதால், ஏராளமானோர் மது வாங்க கடைகளுக்கு படையெடுத்தனர். மதுக்கடைகளில் தனிமனித இடைவெளியுடன் மட்டுமே மது வாங்க வேண்டும், ஒருவருக்கு ஒரு பாட்டில் மதுபானம் மட்டுமே விற்கப்படும் போன்ற சில விதிமுறைகளின் படி மதுக்கடைகளில் வியபாரம் நடபெற்று வருகிறது._

*☯சென்னையில் சாலையோரம் கிடந்த 2 மாத ஆண் குழந்தை - காப்பகத்தில் ஒப்படைத்த போலீசார்*

சென்னையில் சாலையோரம் கிடந்த 2 மாத ஆண் குழந்தையை காவல்துறையினர் மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், சென்னை அடையாறு பத்மநாபன் நகரின் சாலையோரத்தில் துணியில் சுற்றியபடி ஆண் குழந்தை ஒன்று கிடப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, அங்கு சென்ற சாஸ்திரி நகர் காவல்துறையினர் 2 மாத ஆண் குழந்தையை கண்டெடுத்தனர்.

செங்கல்பட்டில் ஊரடங்கு உத்தரவை ...

தொடர்ந்து குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் அண்ணா நகரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த காவல்துறையினர், குழந்தையை வீசி சென்றவர் யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

*☯“ஊரடங்கு விதிகள் தளர்வு” : யார் யாருக்கு அனுமதி? ; யாருக்கு அனுமதி இல்லை ? - மத்திய அரசு அறிவிப்பு!*

_*ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.*_

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,000-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,439 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 377 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தீவிரமானதைத் தொடர்ந்து மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். அப்போது பேசிய அவர், ஏப்ரல் 20 வரை தீவிர கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும் என்றும், ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு நிபந்தனைகளுடன் சில தளர்வுகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என கூறியிருந்தார். அதன்படி ஊரடங்கின் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது.

*“ஊரடங்கு விதிகள் தளர்வு” : யார் யாருக்கு அனுமதி? ; யாருக்கு அனுமதி இல்லை ? - மத்திய அரசு அறிவிப்பு!*

*யார் யாருக்கு அனுமதி ?*

சிறப்பு பொருளாதார மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி.

கட்டுமானப்பணிகள் மற்றும் வேளாண் தொடர்புடைய அனைத்து பணிகளும் தொடங்க அனுமதி.

50% தொழிலாளர்களுடன் தேயிலை, காபி தோட்டங்கள் இயங்க அனுமதி.

100 நாள் வேலைத் திட்டத்தில் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு அனுமதி.

நெடுஞ்சாலைகளில் உள்ள மெக்கானிக் ஷாப்புகள், தாபாக்கள் இயங்க அனுமதி.

33% ஊழியர்களுடன் அரசு அலுவலங்கள் இயங்க அனுமதி.

தச்சுவேலை, பிளம்பர், எலெக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக் போன்ற தொழிலில் ஈடுபடுவோருக்கு அனுமதி.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் செயல்படலாம்.

கொரியர் சேவைகள் தொடரலாம்.

*“ஊரடங்கு விதிகள் தளர்வு” : யார் யாருக்கு அனுமதி? ; யாருக்கு அனுமதி இல்லை ? - மத்திய அரசு அறிவிப்பு!*

*யாருக்கு அனுமதி இல்லை ?*

நாடுமுழுவதும் மதுக்கடைகளை திறக்க அனுமதி இல்லை.

பொது போக்குவரத்து சேவைகள், கல்வி நிலையங்கள், பயிற்சி மையங்கள், மால்கள், வணிக வளாகங்கள் இயங்க தடை.

அனைத்து வழிபாடு தலங்களில் பொதுமக்கள் அனுமதிக்கக்கூடாது. திருவிழாக்கள் நடத்தக்கூடாது.

சிறப்பு அனுமதி பெற்றப்பட்ட நிறுவனங்களை தவிர்த்து, பிற தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் இயங்க தடை.

அதுமட்டுமின்றி, தொற்று அதிகமுள்ள பகுதிகள், கட்டுப்படுத்துதல் பகுதியாக மாற்றி சீல் வைக்கப்படும். பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் வசூலிக்கவும்உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் ஏப்ரல் 20ல் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

*☯ஆசியாவில் இந்தியா மிக மோசம்.. இன்னும் 1 வாரத்தில் இரட்டிப்பு ஆகும்.. பகீர் கொரோனா புள்ளி விவரம்!*

டெல்லி: இந்தியாவில் தற்போது பரவும் வேகத்தில் கொரோனா பரவினால் இன்னும் ஒரு வாரத்தில் இந்தியாவில் கேஸ்களில் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகும் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

கொரோனா பரவலை உலகம் முழுக்க தீவிரமாக கண்காணித்து வரும் ஜான் ஹாப்கின்ஸ் கோவிட் டிராக்கர் (John Hopkins Covid Tracker) மற்றும் மத்திய அரசின் சுகாதாரத்துறை இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பரவல் குறித்த [புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் எவ்வளவு வேகத்தில் கொரோனா பரவுகிறது என்று இந்த புள்ளி விவரத்தில் விளக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது மத்திய அரசின் புள்ளி விவரத்தின் படி மொத்தம் 11,439 பேருக்கு கொரோனா வைரஸ் உள்ளது. இந்தியாவில் மொத்தம் 390 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்

*வேகம் எப்படி உள்ளது*
கடந்த இரண்டு நாட்களில் இந்தியாவில் கொரோனா 24% உயர்ந்துள்ளது. அதற்கு முன் உள்ள இரண்டு நாட்களில் கொரோனா 28% ஆக பரவியது. இது கொஞ்சம் குறைந்துள்ளது. இந்தியாவில் தினமும் சராசரியாக 1010 பேர் வீதம் கொரோனா காரணமாக கடந்த ஒரு வாரமாக பாதிக்கப்படுகிறார்கள். இந்தியாவில் 7 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகிறது.

*இரட்டிப்பு ஆகிறது*
ஆம் இந்தியாவில் வாரத்திற்கு ஒருமுறை கொரோனா பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை அப்படியே இரட்டிப்பு ஆகிறது. இதற்கு முன் 4 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா இரட்டிப்பு அடைந்த நிலையில் தற்போது 7 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு ஆகிறது. இது கொஞ்சம் ஆறுதல் அளிக்க கூடிய விஷயம். ஆனாலும் இந்தியா ஆசியாவில் இருக்கும் மற்ற நாடுகளை விட மிக மோசமாக இதில் பின் தங்கி உள்ளது.

*☯#BREAKING அரசியல் கட்சியினர் உணவு, நிவாரணம் வழங்க அரசு விதித்த தடைக்கு எதிராக திமுக தொடர்ந்த வழக்கில் நாளை தீர்ப்பு*

*- சென்னை உயர்நீதிமன்றம்*

*☯நேரடியாக நிவாரணப் பொருட்கள் வழங்கினால் நோய் தொற்று ஏற்படும் என அரசு தெரிவித்திருந்தது*

*உரிய கட்டுப்பாடுகளுடன் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்*

*☯எலெக்ட்ரீஷியன் பிளம்பர் ஆகிய அத்தியாவசியமாக பணிபுரிபவர்களுக்கு மத்திய அரசு அனுமதி*

*ரயில் விமானம் மெட்ரோ சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் மே 3ஆம் தேதி வரை இயங்காது*

*பொது இடங்களில் எச்சில் துப்பினால் 500 ரூபாய் அபராதம் விதிக்க மத்திய அரசு உத்தரவு*

*திரையரங்குகள் வணிக வளாகங்கள் அரசியல் நிகழ்வுகள் வழிபாட்டுத்தலங்கள் பொதுக் கூட்டத்திற்கு தடை தொடரும்*

*ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு நகரங்களுக்கு வெளியே அமைந்திருக்கும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி*

*☯விவசாயம் சார்ந்த இயந்திர நிறுவனங்கள் பழுது நீக்கும் நிறுவனங்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி*

*100 நாள் வேலை உறுதி திட்டத்தில் பணிகளை தொடரலாம் மத்திய அரசு அறிவிப்பு*

*144 தடை உத்தரவு மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது*

*☯கொரோனா  ஊரடங்கு உத்தரவால், ஏப்ரல்-மே மாதங்களில் வீடுகளில் மின்சாரப் பயன்பாடுகள் அதிகரிக்க கூடும்.*  *வருமானமின்றித் தவித்து வரும் இந்தச் சூழலில், தமிழக அரசு மின்சாரக் கட்டணம் செலுத்துவதிலிருந்து சலுகைகள் மற்றும் விலக்கு அளிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்*
*தமிழச்சி தங்கபாண்டியன்*

*☯இனி 10-ம் வகுப்புப் பாடங்கள் தினந்தோறும் பொதிகை சேனலில் ஒளிபரப்பு*

பத்தாம் வகுப்பு பாடங்கள், இன்று (ஏப்ரல் 15) முதல் டிடி பொதிகை சேனலில் தினமும் காலை 10 முதல் 11 மணி வரை ஒளிபரப்பப் படுகிறது.

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தில் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. கரோனா நோய்த்தொற்று எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு ஏப்ரல் 14 வரை அறிவிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் 14-க்குப் பிறகு தேர்வு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதற்கிடையில் மீண்டும் மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுத் தேர்வு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. எனினும் பொதுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதனால் மாணவர்கள் ஆன்லைன் மூலம் பல்வேறு பாடங்களைக் கற்று வருகின்றனர். அரசுப் பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் இணையவழிக் கற்றல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவர்களுக்கு, மேலும் பாடங்கள் எளிதில் சென்றடையும் வகையில் டிடி பொதிகை சேனலில் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் பாடங்களை எடுக்கின்றனர். இன்று (புதன்கிழமை) முதல் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

ஏற்கெனவே கல்வித் தொலைக்காட்சி மூலம் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடங்கள் தினமும் ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

*☯நிஜமுகம் செய்திகள்*

செவ்வாய், 14 ஏப்ரல், 2020

Breaking: ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது, மத்திய அரசு

#Breaking: ஊரடங்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது, மத்திய அரசு

* ஏப்ரல் 20ஆம் தேதி முதல் அனைத்துவிதமான விவசாயப் பணிகளையும் மேற்கொள்ள அனுமதி

* கொள்முதல் நிலையங்கள் செயல்பட தடையில்லை - மத்திய அரசு

* விவசாய உபகரணங்கள், உரங்கள் விற்பனை நிலையங்கள் செயல்படலாம்

* விவசாயப் பொருள் போக்குவரத்து தங்குதடையின்றி நடைபெறுவதை மாநில அரசுகள் உறுதி செய வேண்டும்

* மீன்பிடித் தொழில் மற்றும் மீன் விற்பனைக்கு அனுமதி

* தேயிலை, காஃபி, ரப்பர் உற்பத்திப் பணிகளை 50 சதவீத ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்

* பால் உற்பத்தி மற்றும் விநியோகம் வழக்கம் போல நடைபெறலாம்

* ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள்படி வங்கிகள், ஏ.டி.எம்-கள் செயல்படும்

* கல்வி நிறுவனங்கள் ஆன்-லைன் மூலம் வகுப்புகளை நடத்தலாம்

* அத்தியாவசியப் பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இயங்க தடை இல்லை

* ஏப்ரல் 20ஆம் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்திற்கு அனுமதி

* 100 நாள் வேலை திட்டத்தின்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்

* ஊரகப் பகுதியில் உணவுப் பதப்படுத்தும் நிறுவனங்கள் இயங்கலாம்

* ஊரகப் பகுதியில் சிறு, குறு தொழில் சார்ந்த கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்

* லாரிகள் பழுதுபார்க்கும் பட்டறைகள் இயங்க அனுமதி

* நெடுஞ்சாலைகளில் உள்ள தாபாக்கள் சமூக இடைவெளியுடன் இயங்க அனுமதி

* தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடினால் கடும் நடவடிக்கை

* பொது இடங்களிலும், அலுவலகங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயம்

* 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட கூடாது - மத்திய அரசு

* பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்

* எலக்ட்ரீசியன், பிளம்பர்,  மெக்கானிக்குகள், மரவேலை செய்பவர்கள் பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ளலாம்
#COVID19 | #StayHome | #Lockdown2

மே மாதம் 3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

மே மாதம் 3 ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

ஏப்ரல் 20 க்கு மேல் முக்கியமான அத்தியாவசிய தேவைகளுக்கு விலக்கு கொடுக்க உள்ளோம் அது பற்றி நாளை அறிவிப்பு வரும்

கொரணா பரவலில் அடுத்த 1 வாரம் மிகவும் முக்கியமானது மக்கள் எச்சரிக்கையாக இருங்கள்

கொரணா பாதித்த பகுதிகளில் வாழும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள்

அத்தியாவசிய தேவைக்கு வெளியே வரும் மக்கள் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும்

ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்களில் சில விதிவிலக்குகள் செய்யப்படும்

வீட்டில் உள்ள வயது மூத்தவர்களை குடும்பத்தினர் கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்

சமூக இடைவெளி என்பது இலட்சுமண ரேகை போன்றது தயவு செய்து மக்கள் அதை மீற வேண்டாம்

கொரணா ஒழிப்பில் அரசுக்கு ஒத்துழைப்பதில் நாட்டு மக்கள் அனைவரும் படை வீரர்களை போல செயல்படுகின்றனர் அவர்களுக்கு நன்றி !

கொரணா ஒழிப்பில் உலக நாடுகளுக்கு நம்ம இந்தியா முன் மாதிரியாக உள்ளது வளர்ந்த நாடுகள் கூட நம்மை போன்று முன் எச்சரிக்கைகளை எடுக்கவில்லை.

கொரணாவிற்கு எதிராக போராடும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மேலும் காவல்துறை யினருக்கு உரிய மரியாதையை மக்கள் கொடுக்க வேண்டும்

பாரத பிரதமர் #மோடி ஜி மக்களிடம் உரை

புதன், 1 ஏப்ரல், 2020

டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 190 பேருக்கு கொரோனா

*டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 190 பேருக்கு கொரோனா.*

*இன்று உறுதிசெய்யப்பட்ட 110 பேரும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.*

*கொரானோ உறுதி செய்யப்பட்டவர்கள் மாவட்ட வாரியாக:*

*110 New TN Dist Break-up*

*Tirunelveli - 6*

*Coimbatore - 28*

*Erode - 2*

*Theni - 20*

*Dindigul - 17*

*Madurai - 9*

*Tirupathur - 7*

*Chengalpet - 7*

*Sivagangai - 5*

*Tuticorin - 2*

*Tiruvarur - 2*

*Karur - 1*

*Kanchi - 2*

*Chennai - 1*

*Tiruvanamalai - 1*

சனி, 28 மார்ச், 2020

மாண்புமிகு பிரதமர் மோடிஜியின் அரசு அறிவிப்பு

மாண்புமிகு பிரதமர் மோடிஜியின் அரசு அறிவிப்பு

*உடனடியாக உதவி தேவைப்படும் ஏழைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர்களுக்கு 1,70,000 கோடி ஒதுக்கீடு*

*யாரும் பசி, பட்டினியோடு இருந்து விடக்கூடாது என்பதற்காக உதவிகள் அவர்கள் வங்கி கணக்கிலேயே வழங்கப்படும்*

*மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு*

*5 கிலோ கோதுமை அல்லது அரிசி, அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்*

*வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக 3 மாதத்திற்க்கு வழங்கப்படும்*


*இந்த திட்டங்களின் அடிப்படையில், பொருட்கள் 2 தவணையாக வழங்கப்படும்*

*விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்*

*விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும்*


*முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்*


*100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட  சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு*

*விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்*

*20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும்*

*உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் வழங்கப்படும்*

*மகளிர் குழுக்களுக்கு தீன் தயாள் திட்டத்தின் கீழ், ரூ.20 லட்சம் கடன் வழங்கப்படும்*

*முறைசார் தொழிலாளர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு வைப்பு தொகையை அரசே வழங்கும்*


*இதன் கீழ் 31 ஆயிரம் கோடி நிதியை, 3.5 கோடி பதிவு செய்யப்பட்ட கட்டட தொழிலாளர்களுக்காக, மாநில அரசுகள் பயன்படுத்தலாம்.*

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள 9 முக்கிய அறிவிப்புகள்!



மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள 9 முக்கிய அறிவிப்புகள்!

*கரோனா தொற்று இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இதில் மருத்துவர்கள் மற்றும் தொழிலாளர் நலனுக்காக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.*

*► மத்திய அரசின் 'கிஷன் சம்மான் நிதி' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், 2000 ரூபாய் தற்போது உடனடியாக வழங்கப்படும். இதன் மூலம், 8.69 கோடி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.*

*► ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும்.3 கோடி பேர் இதில் பயன்பெறுவர்.*

*► ஜன் தன் யோஜனா கீழ் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு தலா ரூ.500 வழங்கப்படும். இதன் மூலமாக 20 கோடி பெண்கள் பயன்பெறுவார்கள்.*

*► உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் பெண்களுக்கு 3 மாதத்திற்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். 8.3 கோடி பெண்கள் பயன்பெறுவர்.*

*► மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கும் 7 கோடி குடும்பப் பெண்களுக்கு இதுவரை 10 லட்சம் உதவி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இது 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.*

*► வருங்கால வைப்பு நிதி காப்பீட்டுத் தொகையை(24%) அடுத்த 3 மாதத்திற்கு அரசே செலுத்தும்.*

*► பி.எப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள 70% தொகையை எடுத்துக்கொள்ள முடியும். இதில் மாத வருமானம் ரூ. 15,000 க்கு குறைவாக இருக்கும் 90% பணியாளர்கள் அடங்குவர்.*

*► கட்டடத் தொழிலாளர்களுக்கு நல நிதியில் இருந்து அவர்களுக்குத் தேவையான உதவித்தொகையை மாநில அரசு வழங்கும்.*

வெள்ளி, 27 மார்ச், 2020

நம்ம ஊர்ல இலவசம்னு சொன்னால் விஷத்தைகூட எடுத்து ஒளிச்சி வெச்சிப்பாங்க



நம்ம ஊர்ல இலவசம்னு சொன்னால் விஷத்தைகூட எடுத்து ஒளிச்சி வெச்சிப்பாங்க.......


 *3 மாசத்துக்கு இலவச கேஸ்-ன்னு சொல்லிட்டாங்க.. கருப்பு சந்தையும், இடைத்தரகர்களும் நடுவுல லாபம் அடைஞ்சிக்கிட்டு யாருக்கு போய் சேரணுமோ அவங்களுக்கு அந்த நிவாரணம் போய் சேராதோ அப்படிங்கிற ஒரு பயம் எனக்கு இருக்கு..*


*சில விஷயங்களை முறைப்படுத்தாமல், டமால், டிமீல் என மத்திய அரசு தடாலடி அறிவிப்புகளை வெளியிடுவது சரியல்ல..*


*இப்போது அவதிக்கு உள்ளாகி இருப்பவர்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்க முதலில் வழி செய்ய வேண்டும்" என்று நடிகை கஸ்தூரி உருக்கமான ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார்.*


 *நடிகை கஸ்தூரி.. நல்ல அறிவாளி.. எந்த டாப்பிக் என்றாலும் சரளமாக அதே சமயம் விஷயங்களுடன் தரவுகளை தரக்கூடியவர்..*


 *இவரது தமிழ் உச்சரிப்பே தனி ஸ்பெஷல்.. சமூக நிகழ்வுகளாக இருந்தாலும் சரி, அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் ஆனாலும் சரி, தனக்கு மனதில் பட்டதை படக்கென்று வெளிப்படுத்துபவர்*


*ஒரு நடிகை என்பதையும் தாண்டி, தன்னை சமூக செயற்பாட்டாளருமாக தன்னை விழைத்து கொண்டவர்..*


*நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனித்தும், அது சம்பந்தமாக கருத்தை பதிவிட்டும் வருபவர்...*


*இவரது துணிச்சலுக்கு ஏராளமான ஆதரவுகள் வந்தாலும் சில எதிர்ப்புகளும் வரவே செய்யும்.. ஆனால் அந்த எதிர்ப்பையும் தனது பதிலடி ட்வீட்களால் திணறடிப்பார் கஸ்தூரி!*


 *இந்நிலையில் நேற்று ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. அது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 3 மாதங்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் அறிவிப்பு பற்றினதுதான்..*


*திட்டமிடப்படாத அறிவிப்புகளுக்கு இது ஒரு உதாரணம்... இலவசமோ இல்லையோ எல்லா குடும்பத்திற்கும் மாசம் ஒரு சிலிண்டர் கட்டுப்பாடு செய்திருக்கலாம்... ஏற்கனவே கேஸ் ஏஜென்சிகள் சிலிண்டர்களை புக் செய்தால் அதை உரிய நேரத்தில் வழங்காமல் கலக்கத்தை ஏற்படுத்தி வருகின்றனர்" என்று பதிவிட்டிருந்தார். ராகுல்காந்தி உட்பட பலரே நிதியமைச்சரின் அறிவிப்புகளை பாராட்டி கொண்டிருக்கும் வேளையில், கஸ்தூரி மட்டும் ஏன் இப்படி ஒரு பதிவை போட்டார்?*


*குறிப்பாக இலவச கேஸ் அறிவிப்பு குறித்த அவரது கருத்து என்ன என்பது குறித்து ஒன் இந்தியா தமிழ் அவரிடமே கேட்டோம்..*


*அப்போது விரிவான பதிலை நமக்கு அளித்த பேட்டிதான் இது: "*


*நிதியமைச்சர் நிவாரண திட்டங்கள் எல்லாம் அறிவிச்சிருக்காங்க.. அதை எல்லாம் நான் பாராட்டறேன்.. ஆனால் இவை சம்பந்தமாக எதுவும் ஆலோசிக்காமல் வெறும் அறிவிப்புகளை மட்டும் அறிவிச்சிட்டாங்களோன்னு எனக்கு ஒரு ஐயப்பாடு இருக்கு.. எல்லாரும் வீட்டிலேயே இருங்க.. எல்லாம் வீடு தேடி வரும்.. வீடு தேடி மருந்து வரும் அப்படின்னு சொல்றது ஈசி.. ஆனால் செய்யறது கஷ்டம்.இன்னொன்னு, வீடு இருக்கிறவங்களுக்கு எல்லாம் வீடு தேடி வரும்.. வீடே இல்லாமல் அங்கங்க நிறைய பேர் புலம்பெயர்ந்த பணியாளர்கள்தான் இருக்காங்க.. இன்னைக்கு தமிழ்நாட்டிலேயே பார்த்தீங்கன்னா வடக்கத்திகாரர்கள்தான் நிறைய பேர் லேபரா இருக்காங்க..*


*இந்த மாதிரி இவங்க ஒரு இடத்திலயும், குடும்பம் ஒரு இடத்திலயும் இருக்கும்போது அவங்களுக்கான ஏற்பாடுகள் என்ன?*


*அப்படிங்கறதுக்கு ஒரு தெளிவு கிடைச்சா நல்லா இருக்கும். அரசாங்கம் எல்லாமே யோசிச்சுதான் செஞ்சிருப்பாங்க.. நமக்குதான் சொல்லலை அப்படின்னு இருந்தால் நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்.. ஆனால் இதுக்கு முந்தைய காலகட்டங்களில் இருந்த மத்திய அரசு கொடுத்த அறிவிப்புக்கும், அது நடைமுறையில் எப்படி செயல்பட்டது என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கறதால இந்த கேள்வியை நான் முன்வைக்கறேன்.*


 *மத்தபடி நிதியமைச்சர் அறிவித்த எல்லா அறிவிப்புகளையும் நான் வரவேற்கிறேன்.. அது சரியாக, சொன்னபடி நடைமுறைப்படுத்தப்பட்டால் ரொம்ப நல்லாயிருக்கும்.. ஆனால் எனக்கு பெரிய டவுட் இருக்கு.. குறிப்பாக கேஸ் சிலிண்டர் அறிவிப்பு.. 3 மாசத்துக்கு இலவச கேஸ்-ன்னு சொல்லிட்டாங்க.. ஆனால் நம்ம ஊர்ல இலவசம்னு சொன்னால் தேவையோ இல்லையோ, விஷத்தைகூட எடுத்து ஒளிச்சி வெச்சிப்பாங்க.. அது ஒரு மனித இயல்பு.. எதையாவது இப்படி ஃப்ரீ தந்துட்டால், அது கருப்பு சந்தையும், இடைத்தரகர்களும் நடுவுல லாபம் அடைஞ்சிக்கிட்டு யாருக்கு போய் சேரணுமோ அவங்களுக்கு அந்த நிவாரணம் போய் சேராதோ அப்படிங்கிற ஒரு பயம் எனக்கு இருக்கு...*


*எனக்கு மட்டுமில்லை, நிறைய பேர் மனசிலயும் இந்த சந்தேகம் இருக்கு. இந்த அறிவிப்பு வந்த உடனேயே என்னுடைய கியாஸ் ஏஜென்சிக்கு போன் பண்ணி கேட்டேன்.. அங்கே நடுத்தர வர்க்க மக்கள் எல்லாருமே ஆபீஸ் வாசல்ல வந்து நிக்கறாங்களாம்.. புக்கிங் ஒன்னுக்கு ரெண்டா குடுக்கறாங்களாம். எதுக்கோ வாங்கி 2 வெச்சிக்கிடுவோமே அப்படிங்கிற பீதியில புக்கிங் பண்றாங்களாம். கொஞ்சம் வெயிட் பண்றவங்ககூட புக்கிங்-கில் இப்பவே போடுறாங்களாம்.. அந்த ஆபீஸ்லயும் ஆட்கள் இல்லாமல் பாதி ஸ்டாப்ஸ்தான் இருக்காங்க.. கடமை உணர்ச்சியோட எல்லாருமே வந்துட்டு இருந்தாலும், டெலிவரி பண்ற தினக்கூலிகளை அவங்களால அரேஞ் பண்ண முடியல.வண்டிகளுக்கு பெர்மிட் வாங்க முடியல.. நிறைய தடைகளோடுதான் அவங்க தங்களுடைய சர்வீஸ்களை செய்துட்டு இருக்காங்க.. என்கிட்ட சொல்றாங்க, "கஷ்டமாதாங்க இருக்கு...*


*எங்களுக்கு டிமாண்ட் டபுள் ஆகி போச்சு.. எங்களுடைய வேகம் பாதியா போச்சு.. கண்ணை கட்டுதுங்கிற மாதிரி என்கிட்ட சொன்னாங்க.. எல்லாத்தையுமே பீதியிலதான் வாங்கணும் அப்படிங்கிற இடத்துல கொண்டு போய் மக்களை விடகூடாது.. தெலுங்கானா மாநிலத்தில பார்க்கிறோம்... டெல்லியில பார்க்கிறோம், ஹாஸ்டல்கள், கல்லூரி மாணவர்கள் அங்கங்கே விடுதிகளில் அடைபட்டு இருக்காங்க.. இதனால் எங்கியாவது வெளியே போயிட மாட்டோமா அப்படின்னு கூட்டம் கூட்டமா கூடறாங்க.. அதுக்கெல்லாம் ஒரு வழியை முதல்ல பண்ண வேணாமா? உதாரணத்துக்கு, ஒரு காலேஜில் சமையலுக்கு ஆள் இல்லை.. அவன் என்ன பண்ணுவான்? ஆள் இருந்தால்தானே சாப்பாடு போடுவான்? ஆள் வரலைன்னா என்ன பண்ண முடியும்? முதல்ல பொருட்கள் கிடைக்கணும்.. அந்த மாதிரி சில விஷயங்களை வந்து முறைப்படுத்தாமல், டமால், டிமீல் என தடாலடி அறிவிப்பு தந்துட்டா எப்படி? இன்னைக்கு ஆந்திரா-தெலுங்கானா பார்டர்ல தள்ளுமுள்ளு ஆயிடுச்சு. டெல்லியில இருந்து அவங்கவங்க பெங்காலுக்கும், உத்திரபிரதேசத்துக்கும் நடந்து போய்ட்டு இருக்காங்க. வேற வழியில்லை.. பிழைக்க வந்த இடத்திலேயே இருந்தால் பட்டினியால சாவோம் அப்படிங்கிற நிலைமையில இருக்கிறவங்க, அங்கேயே இருக்கிறதை யோசிப்பாங்களா? இல்லை குழந்தைங்களை பசியாற்ற யோசிப்பாங்களா, அந்த மாதிரி கட்டாயங்களில் நிறைய பேர் தள்ளப்பட்டிருக்காங்க.. அவங்களுக்கான நிவாரணத்தை உடனடியா செய்யணும்.. இதை சொல்லும்போது தமிழகத்தில் உள்ள நடைமுறையையும் நான் சொல்லி என் வாழ்த்தை தெரிவிக்கணும்னு நினைக்கிறேன்.இப்படி தமிழகத்துக்கு வெளியில இருந்து வந்து இங்கே மாட்டிக்கிட்ட பணியாட்களை, தினக்கூலி ஆட்களை ஆங்காங்கே பள்ளிக்கூடங்களில், அரசு பள்ளி கூட வளாகங்களில் கேம்ப் போட்டு தங்க வைச்சிருக்காங்க.. 17 கேம்ப் போட்டிருக்காங்க.. அவங்களுக்கு வேலை, தேவையான சாப்பாடு, தினமும் ஸ்கிரீனிங், பண்ணிக்கிட்டு இருக்காங்க.. இந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இந்தியா முழுக்க இல்லை.. அது மாநில அரசாங்கங்களின் பொறுப்பு என்பதுடன் சேர்த்து, மத்திய அரசாங்கத்தின் பொறுப்பும் இதுல இருக்கு!!" என்று ஆணித்தரமான தன் கருத்துக்களை நம்மிடம் வைத்தார் கஸ்தூரி!!